ISHI TELEGRAM
T̲H̲E̲ F̲E̲A̲S̲T̲ O̲F̲ H̲A̲R̲V̲E̲S̲T̲
INDEX:
1.துதி
• யூதாவின் சுபாவம்
2. புத்தியுள்ள ஆராதனை
• பணிவு
3. அறுவடையின் சந்தோஷம்
4. தேவ திருசித்தம்
5. பலன்
6. அறுவடையின் எஜமான்
7. சபிக்கப்பட்டவன்
8. அறுவடையின் தர்மம்
9. வசனத்தின் எழுப்புதல்
• ஜீவஊற்று
• ஆரோக்கியம்
• உயிர்தெழுப்பின வல்லமை
10. கோதுமை மணி
11. வரம்பெல்லைகள்
12. விளைய செய்கிறவர்
13. எதிர்ப்பார்ப்பு
• நீடிய பொறுமை
• ஊழியக்காரன்
• உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன்
• கடினமான ஊழியக்காரன்
14. யார் பெரியவன்
15. ஆலயத்தின் பிரமாணம்
வாசல்கள்
• ஆட்டு வாசல்
• மீன் வாசல்
• பழைய வாசல்
• பள்ளத்தாக்கின் வாசல்:
• குப்பைமேட்டு வாசல்/ பரிசுத்தத்தின் வாசல்
• ஊரணி வாசல்
• தண்ணீர் வாசல்
• குதிரை வாசல்
• கிழக்கு வாசல்
• மிப்காத் வாசல் (பரிசோதனை வாசல்)
16. மறுரூபம்
17. பிரியமானவர்கள்
18. கண்களின் முத்து
19. அழைத்தவரின் தன்மை
20. அநுக்கிரக காலம்
21. மனப்பூர்வமான பலி
22. அளவில்லாத ஆவி
23. நன்மைகளின் நாயகருக்கு நன்றி
Series 1:
10.08.2022
துதி
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
ஓசியா 6:11
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
துதிக்கிறவனுக்கு தேவன் அறுவடையை நியமித்திருக்கிறார்.
யூதா என்பதற்கு துதி என்று அர்த்தம்.
உதாரணம்:
பவுலும் சீலாவும் எல்லா சூழ்நிலையிலும் தேவனை துதித்தார்கள்.
எங்கெல்லாம் அவர்கள் தேவனுடைய நாமத்தை துதித்து உயர்த்தினார்களோ, அங்கே அவருடைய பிரசன்னம் இறங்கியது.
அதினாலே அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருந்தவர்களுக்கும் விடுதலை கிடைத்தது.
இதுவே "ஆத்தும அறுவடை" என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்முடைய வாக்குத்தத்தங்களுக்கு நாம் தகுதியற்றவர்களாய் இருந்தாலும்,
சூழ்நிலை எதிர்மறையாய் இருந்தாலும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து துதித்து பாடி ஜெயம் எடுப்போம்.
ஏனென்றால், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை நம்பக்கூடியவர்கள் எல்லாவற்றிலும் அவரைப் துதிப்பார்கள்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
துதித்து பாடிட பாத்திரரே உமக்கு ஸ்தோத்திரம்.
Series:1
Subseries: 1
27.07.2022
யூதாவின் சுபாவம்
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
ஆதியாகமம் 37ஆம் அத்தியாயம்.
யோசேப்பினுடைய சகோதரர்கள் அவனை குழியில் தள்ளி கொலை செய்ய நினைத்த போது, யூதா மட்டும் அவனை காப்பாற்ற நினைத்து அவன் ஜீவனை தப்புவித்தான்.
யூதா செய்த நன்மை அவனுடைய நற்குணத்தை வெளிப்படுத்துகிறது.
ஒருவேளை இது குழியில் இருந்த யோசேப்புக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் தேவன் இதை பார்த்தார்.
யூதா யோசேப்பை மறுபடியும் அரண்மனையில் சந்தித்த போதும், அவனுக்கு தான் செய்த நன்மையை வெளிப்படுத்தவில்லை.
இதிலிருந்து, துதிக்கிறவன் தேவன் ஒருவரை மட்டும்தான் உயர்த்துவான் என்பது வெளிப்படுகிறது.
கோத்திரத்தின்படி முத்த மகனாகிய ரூபனே எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருந்திருக்கனும்.
ஆனால் தேவன், யூதாவையே முதன்மையானவனாக தெரிந்து கொண்டார்.
துதிக்கிறவன் நேர்மையாய் நியாயம் செய்கிறவனாய் இருப்பான்.
கிறிஸ்து இயேசுவும் சரீரத்தின்படி நீதியுள்ள நியாயாதிபதியாக யூதா கோத்திரத்தில் பிறந்தார்.
நாம் செய்கிற நன்மை, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அதை கணக்கில் வைத்திருப்பார்.
உன் வலதுகரம் செய்கிற நன்மை இடதுகைக்கு தெரியாமல் இருக்க கடவது.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
யூதா கோத்திர சிங்கம் இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம்.
SERIES:2
புத்தியுள்ள ஆராதனை
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்,
அது இப்பொழுதே வந்திருக்கிறது;
தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:23
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
யோசுவா 6 ஆம் அத்தியாயம்.
யோசுவா ஜனங்களை நோக்கி:
நான் சொல்லும் நாள்மட்டும்,
நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்;
உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்;
ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
யோசுவா 6:10
தேவன் வாக்குதத்தம் பண்ணின கானானை சுதந்தரிக்க தடையாய் இருந்த எரிகோ கோட்டை துதியினால் இடிந்து விழுந்தது.
இந்த வெற்றிக்கு முன்பாக தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு "ஏழாம் நாளில் ஆர்ப்பரிப்புக்கு முன்பு பேசவோ சத்தமிடவோ கூடாது" என்று கட்டளை கொடுத்தார்.
இந்த கட்டளையை பின்பற்றி ஏழாம் நாளில் துதித்தபடியால் ஜெயம் கிடைத்தது.
மாமிசத்தின்படி பேசாமல் ஒருவராலும் இருக்க முடியாது.
ஆனாலும் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த ஆறு நாளும் மாம்சத்தை அடக்கினபடியால், ஏழாம் நாளில் ஆவியின் மனிதன் வெளிப்பட்டான்.
இப்படி ஆவியோடும் உண்மையோடும் துதித்து ஜெயம் எடுத்தார்கள்.
இப்படியாக தேவனை துதிக்கிறவன் தன்னுடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்பு கொடுத்து (மாம்சத்தை ஒடுக்கி ஆவியின் மனிதனை வெளியே கொண்டு வருவது), ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிப்பதே புத்தியுள்ள ஆராதனை.
துதிக்கிறவன் வாயிலிருந்து தகுந்த நேரத்தில் தகுந்த வார்த்தைகள் மட்டுமே பேசப்பட வேண்டும்.
துதிக்கிறவன் முறுமுறுக்கிறவனாய் இருக்கமாட்டான்.
ஒரே ஊற்றிலிருந்து கசப்பான தண்ணீரும் தித்திப்பான தண்ணீரும் புரப்படாது.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்
புத்தியுள்ள ஆராதனை செய்து தேவனை மகிமைப்படுத்துவோம், தேசத்தை சுதந்தரிப்போம்.
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவருக்கு ஸ்தோத்திரம்! ஆமென்!
SERIES:2
Subseries: 1
பணிவு
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
யாக்கோபு 4:6
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
சண்டைகளும், வீம்புகளும், தகாத வார்த்தைகளும் பெருமையினால் பொறாமையினால் வருகிறது.
மனதாழ்மையாய் இருப்பதே தேவனுக்கு பிரியமானது.
இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.
நம்மைவிட மற்றவர்களை மேன்மையுள்ளர்களாக நினைப்பதே தாழ்மை.
தாழ்வு மனப்பான்மையை அல்ல, மனதாழ்மையை தரித்துகொள்வோம்.
மனிதர்களுடைய பார்வையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேற பெற்றவர்களாய் அங்கீகரிக்கப்படுவது இதன்மூலம்தான்.
உதாரணம்:
1.கிறிஸ்து இயேசு:
கிறிஸ்து இயேசுவும் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யும்படி வந்தார்.
ஆண்டவரும் போதகருமாகிய அவரே சீஷர்களுடைய பாதங்களை கழுவினதுண்டானால் நாம் நம்மை தாழ்த்துவது எவ்வளவு அவசியமானது
2. லூசிபர்:
எல்லாருக்கும் மேலாய் தன்னை உயர்த்தின *லூசிபர்* என்னும் தூதன் பெருமையினால் தன் ஸ்தானத்தை இழந்தான், அதாவது தேவனால் தள்ளப்பட்டான்.
நாமும் தேவனை ஆராதிக்கும்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
லூசிபர் செய்த தவறை நாம் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்போம்.
ஏனெனில் பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
நம்மை உண்டாகினவர் நமக்கு விரோதமாய் நிற்கும் போது நம்மை காப்பாற்ற ஒருவராலும் கூடாது.
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
சங்கீதம் 2:11
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
தாவீதின் பயபக்திக்குரியவருக்கு ஸ்தோத்திரம்.
Series 3:
அறுவடையின் சந்தோஷம்
17.08.2022
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
யோவான் 4:36
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
விதைத்தவனும் அறுக்கிறவனும் ஒன்று சேர்ந்து சந்தோஷப்படத்தக்கதாக பலன் உண்டாகும்.
பிதாக்கள் இரத்த சாட்சிகளாய் விதைக்கப்பட்டார்கள், பிள்ளைகள் அறுக்கிறார்கள்.
இப்படியாக விதைகிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன்.
உங்கள் கண்களை ஏறெடுத்து பாருங்கள் அறுப்புக்கு வயல்நிலங்கள் வளர்ந்திருக்கிறது.
ஆத்தும அறுவடை காலம் இப்பொழுதே வந்திருக்கிறது.
உன் செய்கைக்கு பலன் உண்டு.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவருக்கு ஸ்தோத்திரம்.
Series: 4
24.08.2022
தேவ திருசித்தம்
அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.
ரூத் 2:3
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
ரூத்துக்கு தற்செயலாய் நேரிட்ட வயல் போவாசுடையதாய் இருந்தது, அந்த இடத்தில்தான் தேவ சித்தம் நிறைவேற தொடங்கியது.
நம்முடைய வாழ்க்கையிலும் சில காரியங்கள் தற்செயலாய் நடக்கிறது போல இருக்கலாம். ஆனால் இது தேவ திட்டம்.
ரூத் போவாசுடைய வயலுக்கு வந்தது தேவ திட்டம்.
நீங்கள் இருக்கிற பகுதி, சபை, குடும்பம் தற்செயலாய் உங்களுக்கு அமைந்தது அல்ல, இது தேவ திட்டம்.
உன் மூலமாய் உன் வீட்டுக்கு, உன் வம்சத்துக்கு ,உன் பகுதிக்கு, ️உன் சபைக்கு , உன் தேசத்துக்கு ஆத்தும அறுவடையை நியமித்திருக்கிறார். இதுவே தேவ திட்டம்.
நீங்கள் வந்த இடம் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல, இது தேவ திட்டம். உன்னிடத்தில் பட்சமாய் இருக்கும்படி தேவன் மனிதர்களை ஏற்படுத்துவார்.
தேவன் உனக்கு ஏற்படுத்திய எல்லையை விட்டு போகாதே.
உன் பகுதிக்கு நீயே தேவாலயம்.
சுவிசேஷம் அறிவிக்கிற இடத்தில் உங்களை ஏற்றுகொள்ளுகிறவர்களை ஆசீர்வதிக்க மறக்காதே, அவன் பாத்திரனாய் இருந்தால் அவன்மேல் அந்த ஆசீர்வாதம் தங்கும்.
நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டவர்கள் என்று அறிந்து மற்றவர்களை ஆசீர்வதியுங்கள்.
ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இருளான காலம் வருகிறது. இப்போது உனக்கு கொடுக்கப்பட்ட தருணத்தை சுவிசேஷத்தை அறிவிக்க பயன்படுத்திக்கொள். இது உனக்கு தற்செயலாய் ஏற்பட்டது அல்ல, தேவ திட்டம்.
இயேசு: ''உனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் ''.
யாக்கோபின் சந்ததியை சிறையிருப்பிலிருந்தது திருப்பும் போது சொப்பனம் காண்கிறது போல் இருக்கும்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
கன்னியின் கற்பத்தில் உதித்த விடிவெள்ளியே உமக்கு ஸ்தோத்திரம்.
Series:5
31.08.2022
பலன்
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
கலாத்தியர் 6:7
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
நீங்கள் எதை விதைத்தீர்களோ, அதை அறுவடை செய்ய போகிறீர்கள்.
நன்மையை விதைத்தவன் அதின் பலனை அறுவடை செய்வான்.
தீமையை விதைத்தவன் அதின் பலனை அறுவடை செய்வான்.
கண்ணீரோடு விதைத்தவன் கெம்பீரத்தோடு அறுவடை செய்வான்.
அவனவனுக்குரிய பலன் அவரோடே கூட வருகிறது.
விதைத்த விதை வளர்ந்து மரமாகி கனிகளை தரும்போது விதை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்,
அதுபோல நாம் எதை விதைத்தோம் என்பது அறுவடையில் விளங்கும்.
முடிந்தவரை யாவரோடும் சமாதானமாயிருந்து நன்மை செய்ய பழகுங்கள்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
ஜெபித்தவன் மறந்திருக்கலாம், ஜெபத்தை கேட்டவர் மறக்காமல் பலன் தருகிறதற்காய் ஸ்தோத்திரம்.
10.09.2022
Series: 6
அறுவடையின் எஜமான்
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம், ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
லூக்கா 10:2
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
அறுப்பு மிகுதி வேலையாட்கள் குறைவாய் இருப்பதால், எஜமான் அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் இருக்கிற ஜனங்களுக்கு ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் சாட்சியாக அறிவிக்கப்பட வேண்டும். அப்பொழுது முடிவு வரும்.
இயேசு:'' என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது ''.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
மறைவான மன்னாவை புசிக்க கொடுக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
14.09.2022
Series: 7
சபிக்கப்பட்டவன்
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள் மகன்: அறுப்புக்காலத்தில் தூங்கிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
நீதிமொழிகள் 10:5
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
நீதிமொழிகளின் புஸ்தகம்.
சோம்பேறியினுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.
தேவனே என்னை உபயோகப்படுத்தும் என்று ஜெபித்தவன் அறுப்பு காலத்தில் தூங்கினால் என்ன பிரியோஜனம்?
இப்படிப்பட்டவன் இலச்சையை உண்டாக்குகிறவன்.
சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங் கிடைக்காது.
அதாவது எஜமானுடைய வேலைக்கு சாக்குபோக்கு சொல்லுகிறவன் சோம்பேறி.
வெளியே சிங்கம் இருக்கும் நான் போகமாட்டேன் என்று சொல்லுகிறவன் சோம்பேறி. அதாவது மற்றவர்களுடைய குறையை சுட்டி காட்டி, ஆவியானவருடைய கிரியயை அசட்டைப்பண்ணி சாக்குபோக்கு சொல்லுகிறவன்.
தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்கு சகோதரன்.
ஊழியத்தை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.
மணவாளன் வர காத்திருந்து விழித்திருந்த கன்னிகைகளே எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
கனநித்திரையிலிருந்து விடுவிக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
21.09.2022
Series: 8
அறுவடையின் தர்மம்
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
2 கொரிந்தியர் 9:10
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
விதை வசனத்திற்கு அடையாளம்.
நிலம் மனிதர்களுக்கு அடையாளம்.
இயேசு என்கிற வார்த்தையாகிய சுவிசேஷத்தை விதைக்கிறவனுக்கு விதை கொடுக்கப்படும்.
இவரை மற்றவர்களிடத்தில் விதைக்காதவனுக்கு கொடுக்கப்பட்ட நன்மை, சாட்சி என்கிற விதையும் எடுத்துக்கொள்ளப்படும்.
சாட்சியின் மூலம் மற்றவர்களுக்கு தேவனை தெரியப்படுத்துவது விதை.
நன்மையினால் அவரை மற்றவர்களுக்குள் விதைப்பது விதை.
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான், இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். மத்தேயு 25:29
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
விதைக்கிறவனுக்கு விதையை பெருக பண்ணி, அதை வர்த்திக்க செய்பவருக்கு ஸ்தோத்திரம்.
28.09.2022
Series 9:
வசனத்தின் எழுப்புதல்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மத்தேயு 16:26
விதைப்பவனின் உவமை:
மத்தேயு 13ஆம் அத்தியாயம்.
விதைக்கிறவன் ஒருவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது, பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது, மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் ழுளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
விதை வசனத்திற்கு அடையாளம். நிலம் மனிதர்களுக்கு அடையாளம்
நாமும் அறுவடையில் தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
நாம் பண்பட்ட நிலமாய் இருந்தால் வசனம் நமக்குள் விதைக்கப்படும் போது அதற்கேற்ற பலனை தருவோம்.
நம்முடைய இருதயத்தை புடமிடுகிற வசனத்தின் எழுப்புதலை வாஞ்சிப்போம்.
உன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தி, நீ உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்துவது தேவ சித்தமல்ல.
முதலில் நீ ஆயத்தப்படு, பின்பு உன்னோடேகூடின ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்தப்படுத்து.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
உன் மூலமாய் வருகிற திரள் கூட்டத்தைவிட தேவனுக்கு நீயே முக்கியம்.
நல்ல விதையை விதைக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
06.10.2022
Series: 9
Subseries:1
ஜீவஊற்று
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
நீதிமொழிகள் 4:23
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
உன் இருதயம் என்கிற ஊற்று வேத வசனத்தினால் நிரப்பப்பட்டால்தான் உன்னிலிருந்து மற்றவர்களுக்கு ஜீவநதி பாயும்.
உனக்குள் உண்டாகும் மாற்றமே மற்றவர்களை பாதிக்கும். இதனை எழுப்புதல் என்று சொல்கிறோம்.
உதாரணம்:
ஆதாம் தேவனோடு இருந்த ஜக்கியத்தை இழந்தான்.
இதை சீர்ப்படுத்த கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த கிறிஸ்து இயேசு வந்தார்.
அவருக்குள் இருந்த வசனம் ஜனங்களை தொட்டது.
ஆதாம் இழந்த தேவனோடுகூட இருந்த ஐக்கியத்தை மறுபடியும் ஜனங்களுக்கு கொடுத்தது.
மனிதன் தேவனோடு இருந்த ஐக்கியத்தை மறுபடியும் எழும்ப செய்வது எழுப்புதல்.
அதாவது நரகத்தை காலியாக்கி, பரலோகத்தை நிறைத்து பிதாவின் ஏக்கத்தை நிறைவேற்றுவது. இதைதான் இயேசு செய்தார்.
இதனையே நம்மிடத்திலிருந்து தேவன் எதிர்ப்பார்க்கிறார்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
பொறாமை துர்குணம் போன்ற இருளை, வசனம் என்கிற ஒளியை கொண்டு அகற்றி, எல்லா காவலோடும் இருதயத்தை காத்துக்கொள்.
வற்றாத நதியாகிய ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.
12.10.2022
Series:9
Subseries:2
ஆரோக்கியம்
சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும். எசேக்கியேல் 47:9
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
நமக்குள் இருக்கும் ஜீவ ஊற்று தண்ணீர் மற்றவர்களுக்குள் பாயும். அப்பொழுது ஆரோக்கியமும் செழிப்பும் தேசத்திற்கு ஷேமமும் உண்டாகும்.
முந்தைய வரலாற்றின் எழுப்புதலின் நாட்களில் தேவன் வயல் நிலத்தை ஆசீர்வதித்தார்.
அதினால் நல்ல பழங்கள், செழிப்பான காய்கறிகள் விளைந்தது என்று கேள்விப்பட்டிருப்போம்.
இது மறுபடியும் நம் தேசத்தில் நடக்கும்.
நமக்குள் இருக்கும் நதி பாயும் திசையெங்கும் ஆரோக்கியம் உண்டாகும், பஞ்சம் விலகும்.
உன் தேசத்தின் ஷேமத்தை தேவன் உன்னிடத்தில் கொடுத்திருக்கிறார்.
நாம் அவரிடத்தில் நம்மை தாழ்த்தி, நம்முடைய பொல்லாத வழிகளைவிட்டு திரும்பி, அவர் முகத்தை தேடினால் தேவன் தேசத்துக்கு ஷேமத்தை கொடுப்பார்.
இயேசு:என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14
தேவனிடத்தில் நீ மனந்திரும்பினால், உனக்குள் உண்டாகும் மாற்றம் தேசத்தை பாதிக்கும்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறை காதுள்ளவன் கேட்க கடவன்.
தேவன் தேடும் மனிதன் நீதான்.
நினிவே பட்டணத்திற்காய் பரிதபித்த தேவனுடைய இருதயம் இன்றும் பரிதபிக்கிறது. உத்திரவாதம் பண்ணி ஜெபி.
தேசம் இப்படி இருப்பதற்கு காரணம் எதுவாகயிருந்தாலும் , வேத அடிப்படையில் பார்த்தால், தேவ நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் கரத்தில் செழிப்பின் திறவுகோள் இருக்கிறது.
இதை வாசிக்கிறவன் ஆவியானவர் சொல்வதை சிந்திக்க கடவன்.
கிரகிக்க முடியாத பாசத்தை மனுகுலத்தின்மேல் வைத்தவருக்கு ஸ்தோத்திரம்.
19.10.2022
Series: 9
Subseries: 3
உயிர்தெழுப்பின வல்லமை
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,*என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11:25
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவ ஊற்றாகிய ஆவியானவர் மரித்த அவரை உயிரோடு எழுப்பினார்.
பிதாவின் சித்தம் நிறைவேறினது.
நமக்குள் இருக்கும் ஜீவ ஊற்று நமக்கு உதவியாயிருக்கும்.
மற்றவர்களுக்கு ஆரோகியத்தை தருகிற இந்த ஜீவ நதி நமக்கும் ஆரோகியத்தை தரும்.
நமக்குள் மரித்த நிலைமையில் இருக்கும் எந்த காரியத்தையும் உயிர்பிக்கும்.
பிதா நம்மில் மகிமைப்படும்படி ஜீவனுள்ள சாட்சியாய் மாற்றும்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
தூயாதி தூயவருக்கு ஸ்தோத்திரம்.
26.10.2022
Series:10
கோதுமை மணி
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
யோவான் 12:24
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
கோதுமை மணிகளாகிய நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த கோதுமைமணி மாம்ச ஆசை இச்சைகளுக்கு மரித்தால்தான் ஆவியின் மனிதன் வெளிப்படுவான்.
அப்பொழுது ஆவியின் கிரியைகள் வெளிப்படும், அது மற்றவர்களுக்கு பிரியோஜனமாய் இருக்கும்.
பலன் தருகிற ஜீவியமே கிறிஸ்தவம்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இரத்த சாட்சிகளின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு ஜெபிக்கவும்.
விசுவாசத்தை துவங்கினவர் முடிக்கிறதற்கு வல்லவராய் இருக்கிறபடியால் ஸ்தோத்திரம்.
02.11.2022
Series:11
வரம்பெல்லைகள்
உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
மத்தேயு 20:14
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
மத்தேயு 20ஆம் அத்தியாயம்.
எஜமான் வேலைக்காரர்களுக்கு கூலி கொடுக்கும்போது, முந்தி வந்தவன் பிந்தி வந்தவனைவிட அதிக கூலி பெறுவான் என்று நினைத்தான்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒரே கூலியை கொடுத்ததினால் முந்தி வந்தவர்கள் முறுமுறுத்தார்கள்.
எஜமான் தன்னுடைய அதிகாரத்தின்படி பேசாமல், சிநேகிதனே என்று அவனுக்கு புரியும்படி சொன்னார்.
அறுப்பு மிகுதி எஜமான் இன்னும் அநேக வேலையாட்களை சேர்ப்பார்.
உனக்குள்ளதை பற்றிக்கொண்டிரு. படியளக்கிறது, ஆட்களை களத்தில் சேர்ப்பது எஜமானுடைய இஷ்டம்.
களத்திலே பொறாமைகளையும், வேண்டாத சுபாவங்களையும் வளர்த்து கொள்ளாதே. தேவையில்லாமல் முறுமுறுத்து பிந்தினோராய் போகாதே.
ஆத்தும அறுவடை என்பதே பிரதான தரிசனம், இதுவே கிறிஸ்து கொடுத்தது.
பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படியே செய்வான்
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானருக்கு ஸ்தோத்திரம்.
09.11.2022
Series: 12
விளைய செய்கிறவர்
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
1 கொரிந்தியர் 3:7
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
ஒருவரும் தங்களைக்குறித்து மேன்மை பாராட்டாதபடிக்கு, விளைச்சல் அல்லது இரட்சிப்பின் பலன் கர்த்தரால் வருகிறது.
ஊழியங்கள் வெவ்வேறு, கர்த்தர் ஒருவரே! தரிசனம் ஒன்றே!! விளைய செய்கிறவரும் அவரே!!!
இரட்சிப்பு கர்த்தரால் அருளப்பட்ட ஈவு.
எல்லாவற்றிலும் தேவன் ஒருவரே உயர்ந்திருப்பாராக!
சகலவிதமான துதியும் கனமும் மகிமையும் விளைய செய்கிற கர்த்தர் ஒருவருக்கே உண்டாவதாக.
ஆமென்.
உன்னத தேவனுக்கு ஸ்தோத்திரம்.
16.11.2022
Series: 13
எதிர்ப்பார்ப்பு
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
அவனவனுடைய பலன் கர்த்தருடனே வருகிறபடியால், எதை செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் தேவன் அங்கீகரிக்கும்படி செய்யுங்கள். இதை நினைவில் கொள்க.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
கர்த்தராகிய தேவன் சீக்கிரமாய் வரப்போகிறபடியால் ஸ்தோத்திரம்.
மாரநாதா
23.11.2022
Series: 13
Subseries 1
நீடிய பொறுமை
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
யாக்கோபு 5:7
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
கர்த்தர் வருமளவும் நம்முடைய இரட்சிப்பை நீடிய பொறுமையுடன் காத்து கொண்டு இருந்தால் அவரிடத்தில் சேர்க்கப்படுவோம்.
அறுவடையில் நாமும் சேர்க்கப்படுவது அவசியம்.
மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிற நாம்தாமே அறுவடையில் ஆகாதவனாய் போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்போம்.
கிறிஸ்துவின் அன்பின் எல்லைக்குள் இருப்பது நல்லது.
ஏசா அவசரப்பட்டு அர்ப்பமான காரியத்துக்காய் விலைமதிப்பில்லா சேஷ்ட புத்திர பாகத்தை இழந்தான்.
அர்ப்பமான காரியத்துக்காய் தேவனை இழக்காமல் எல்லாவற்றிலும் நீடிய பொறுமையோடு இருக்க கடவோம்.
தகப்பன் கிறிஸ்து இயேசு நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறது போல, நாமும் நீடிய பொறுமையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவினுடைய வருகை வரையில் பொறுமையாய் இருந்து இரட்சிப்பை காத்துக்கொள். ஏனெனில் நம்முடைய பலனும் அவரோடேகூட வருகிறது
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
நியாயத்திற்கு ஜெயங்கிடைக்க பண்ணுகிற வரைக்கும் நெரிந்த நாணலை முறியாமலும் மங்கி எறியும் திரியை அணையாமலும் இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
30.11.2022
Series: 13
Subseries 2
ஊழியக்காரன்
தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
லூக்கா 12:47
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
எஜமான் வருகையில் தன் ஊழியக்காரரின் பலனையும் கூட கொண்டு வருவார்.
அவர் சித்தத்தை அறிந்தும், சாக்குப்போக்கு சொல்லி அதை செய்யாமலிருக்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவான்.
கிறிஸ்துவின் வருகை தாமதிக்கும் என்று துணிந்து,
தனக்கு கீழ் இருக்கிற வேலையாட்களை அடிக்கிறவனுக்கு (மற்றவர்களை வார்த்வையினால் துன்பப்படுத்துவதும் அடிகளுக்கு சமமாகும்) அடிகள் ஆயத்தமாயிருக்கிறது.
உலகத்தினால் வரும் உபத்திரவத்தை கூட இந்த நடத்தை பெற்று தரும்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
எஜமானருக்கு ஸ்தோத்திரம்.
07.12.2022
Series: 13
Subseries 3
உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன்
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு 25:23
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தை கொடுக்கிறவர் என்று எழுதப்பட்டபடி, தேவன் விதையாகிய வசனத்தை, சாட்சியை ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்.
இதை மனிதர்களுக்குள் விதைக்கிறவனை தேவன் உண்மையும் உத்தமுமுள்ள ஊழியக்காரன் என்று குறிப்பிடுகிறார்.
தாலந்துகளை உபயோகப்படுத்தி, தன்னையும் மற்றவர்களையும் தேவனுக்காய் ஆயத்தப்படுத்துகிறவனே எஜமானுடைய சந்தோஷத்திற்கு பாத்திரமான ஊழியக்காரன்.
இதை புதைத்து வைக்கிறவன் பொல்லாத ஊழியக்காரன். ஏனென்றால் இதனால் மற்றவர்களுக்கும் எஜமானுக்கும் பிரயோஜனம் இல்லை, அவனுடைய சொந்த ஆத்துமாவுக்கும் உபயோகப்படவில்லை.
(தாலந்தை புதைத்து வைத்ததால் எஜமான் அவனை புறம்பான இருளில் தள்ளினார்). தேவன் நம்மை உண்மையும் உத்தமுமான ஊழியக்காரன் என்று அழைக்கும்படி உழைப்போம்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
கிருபையினால் அலங்கரிப்பவருக்கு ஸ்தோத்திரம்.
14.12.2022
Series: 13
Subseries 4
கடினமான ஊழியக்காரன்
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
மத்தேயு 18:34,35
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
மத்தேயு 18ஆம் அத்தியாயம்.
ஒருவர் தப்பிதங்ளை மற்றவர்கள் மன்னிக்காமல் கடினமாய் நடத்தும் போது, பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.
இப்படிப்பட்டவர்களை தேவன் உபாதிக்கிறவனிடத்தில் ஒப்புக்கொடுப்பார்.
எப்படியெனில், ஒருவரை ஒருவர் கடினமாய் நடத்தி சண்டை போட்டு கொள்கிறீர்கள்.
உங்கள் கூட்டத்தில் இல்லாத ஒருவனை, உங்கள் அனைவரையும் கடினமாய் நடத்த தேவன் அனுமதிக்கும் போது, ஒருவரை ஒருவர் தாங்கும்படி இரக்கம் உண்டாகும்.
இதிலும் திருந்தாத சிலருக்கு நித்திய அக்கனி கந்தகத்தின் கடல் ஆயத்தமாயிருக்கிறது.
மன்னிக்கிறவர்கள் மனிதர்கள். தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறவர்கள் தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒருவரே பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் கண்டித்து உணர்த்துகிறவர்.
பழைய துருத்தியில் புது ரசத்தை வார்க்க முடியாது. உன்னை மண் என்று நினைவுக்கூர்ந்து குயவனுடைய கரத்தில் அர்பணி.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
வெகுவாய் தண்டித்தும் சாவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காதவருக்கு ஸ்தோத்திரம்.
21.12.2022
Series: 14
யார் பெரியவன்
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
யோவான் 13:16
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
உங்களில் யார் பெரியவன் என்று பார்க்கிறதென்ன? ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல.
ஆத்தும அறுவடையின் நாயகராய் இருக்கிற இயேசு ஊழியம் செய்யும்படி வந்து, சீஷர்களுடைய கால்களை கழுவினதுண்டால்! அவரை பின்பற்றுகிறவர்களும் அவரை போலவே இருக்க வேண்டும்.
ஜனங்களும் தேவனும் இல்லாவிட்டால் ஊழியக்காரன் தேவையில்லை.
யார் முக்கியம்? எதை செய்ய வேண்டும்? என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.
தாழ்மையாய் இருந்தால் மேன்மை அடைவீர்கள், அகந்தையாய் இருந்தால் தள்ளப்படுவீர்கள்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
ஐஸ்வரிய சம்பன்னருக்கு ஸ்தோத்திரம்.
28.12.2022
Series: 15
ஆலயத்தின் பிரமாணம்
வாசல்கள்
1. ஆட்டு வாசல்
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்.
அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
நெகேமியா 3:1
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
ஆட்டு வாசல் என்பது பாவ நிவாரண பலி செலுத்தும் மிருகத்தை உள்ளே கொண்டு வருகிற வாசல்.
சபையில் நம்முடைய பாவங்களுக்காய் மரித்த உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவாகிய ஆட்டுக்குட்டியானவருடைய தொடுதல் எப்போதும் இருக்க வேண்டும்.
இரட்சிப்பாகிய வாசல் இருக்க வேண்டும். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.
இன்று அநேக இடங்களில் இயேசு வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறார்.
இரட்சகருக்கு இடங்கொடுத்தால் மட்டுமே அநேகர் இரட்சிக்கப்பட்டு சபை பெருகும்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
என் இரட்சிப்பின் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
2. மீன் வாசல்
மீன்வாசல் அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
நெகேமியா 3:3
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
மீன் வாசல் என்பது ஆத்தும அறுவடையை குறிக்கும் (மனிதர்களைப் பிடிப்பது).
இயேசு பேதுருவை அழைத்து, அவனை மனிதர்களை பிடிக்கிறவனாக மாற்றினார், ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி சீஷர்களுக்கு கட்டளையிட்டார்.
சபையில் மலட்டு தன்மை இருக்க கூடாது, கனி கொடுத்து பெருக வேண்டும். தனி நபர்/குழு சுவிசேஷ ஊழியம் அவசியம்.
இந்த வாசலுக்கு பூட்டு தாழ்பாள்கள் வைக்கப்பட்டது. அதாவது உள்ளே கொண்டு வரப்படுகிற மனிதன் எந்த சூழ்நிலையிலும் அவன் இரட்சிப்பை இழந்து, வந்த வாசல் வழியாய் திரும்ப போக கூடாது. பரிசுத்த ஆவியானவரால் முத்தரிக்கப்பட வேண்டும்.
மீன் வாசல் வழியாய் உள்ளே வருகிற ஆத்துமா, பரலோகத்தில் எஜமானிடத்தில் சேர்க்கபட வேண்டும். பரிசுத்த ஆவியினாலும் ஜலத்தினாலும் ஞானஸ்தானம் எடுத்திருக்க வேண்டும்.
ஆவியானவர் சபைக்களுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சபை உலக பிரகாரமான மீன் சந்தையை போல் இல்லாமல், ஆவிக்குரிய பிரகாரமாக மனிதர்களை பிடித்து அவர்களை தக்கவைக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
இயேசு: ''உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13''.
எங்களுக்காய் பரிந்து பேசுகிறவருக்கு ஸ்தோத்திரம்
11.01.2023
3.பழைய வாசல்
பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
நெகேமியா 3:6
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
பழைய வாசல் என்பது ஆவிக்குரிய மூத்தவர்களின் வழிக்காட்டுதலை குறிக்கும்.
இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்குள் வருகிறவர்களை வழிநடத்தும்படி ஆவிக்குரிய மூத்தவர்கள்/மூப்பர்கள் இருக்க வேண்டும்.
இரட்சிக்கப்பட்டு வருகிறவர்கள் புதிதாய் பிறந்த குழந்தைகளை போல் இருப்பதால், அவர்களுக்கு சத்தியத்தை போதிக்கவும், பின்மாற்றத்திற்குள் போகாதபடிக்கு அவர்களை சரியான வழியில் ஆவியானவருடைய உதவியோடு நடத்துகிறதற்கும் ஆவிக்குரிய மூத்தவர்கள் தேவை.
அநேக ஆலோசனைக்காரர் இருந்தால் ஜெயம் உண்டாகும்.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். எரேமியா 6:16
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
நேர் வழியில் நடத்துகிற ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.
18.01.2023
4. பள்ளத்தாக்கின் வாசல்:
பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதைக் கட்டி, அதற்குத் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
நெகேமியா 3:13
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
பள்ளத்தாக்கின் வாசல் என்பது புடமிடப்படுகிற அனுபவம்/ உபத்திரவத்தின் பாதை, கர்த்தருடைய வசனம்.
சபையிலே இரட்சிக்கப்பட்டு ஆவியினாலும் ஜலத்தினாலும் ஞானஸ்தானம் பெற்று சத்தியத்தில் பலப்படுத்தப்படுவார்கள். இதற்கு பின்பு பள்ளத்தாக்கின் வாசல் வரும், சத்தியத்தில் நிலைநிற்கும்படி புடமிடபடுகிற அனுபவம். இதை பரீட்சையின் வாசல் என்றும் சொல்லலாம்.
பள்ளத்தாக்கில் சுற்றி
1. உலர்ந்த எலும்புகள் இருக்கும்
2. இருள் இருக்கும்
3. விஷப்பாம்புகள் இருக்கும்
4. இன்னும் பல அச்சுறுத்தும் ஜீவபிராணிகளும் சூழ்நிலைகளும் இருக்கும்.
இதுவரை சத்தியத்தில் வளர்க்கப்பட்டவர்கள், இதிலே நிலைநிற்கும்படி புடமிட்டு, தேவையற்ற சுபாவங்களை அகற்றி, சுத்த பொன்னாக விளங்க செய்வது பள்ளத்தாக்கின் வாசல்.
யார் தேர்ச்சி அடைவார்கள்?
இரட்சிக்கப்பட்டு வருகிற அனைவரும் இந்த பரீட்சையில் தேர்ச்சி அடைவதில்லை, சிலர் பின்வாங்கிவிடுவார்கள், ஒரு சிலர் தேர்ச்சி அடைந்து அடுத்த நிலைக்கு போவார்கள்.
உதாரணம்:
1. அர்பணித்த துருத்தி:
நீங்கள் மற்றவர்களுக்கும் எஜமானுக்கும் உபயோகமாய் இருக்கும்படி துருத்தியாகிய உங்களை புகை என்கிற பள்ளத்தாக்கில் வைத்து புடமிடுவார்.
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன், உமது பிரமாணங்களையோ மறவேன். சங்கீதம் 119:83
உங்களோடு இந்த வாசல் வழியாய் ஒருவரும் துணையாக வருவதில்லை. உங்களுக்கு சாட்சிகளாய் இருக்கும்படி அநேக ஊழியர்களும்,
இந்த பாதையை கடந்து நீதிமான் என்கிற ஸ்தானத்திலிருந்து பரிசுத்தவான் என்கிற ஸ்தானத்திற்கு வந்த பரிசுத்தவான்களும் உங்களுக்கு முன்பாக இருப்பார்கள்.
இதிலே சிக்கினவர்கள் இந்த பள்ளத்தாக்கில் உலர்ந்த எலுப்புகளாய் இருப்பார்கள்.
சிலர் இந்த பள்ளத்தாக்கின் வாசலை அதாவது மற்றவர்கள் போகிற பாதையை பார்த்தவுடன் இதிலே பிரவேசிக்காமல் பின்மாற்றத்தில் போவார்கள்.
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம்:
இந்த பாதையில் ஒருவரும் தனிமையில் போவதில்லை பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமாகிய கிறிஸ்து இயேசு உங்களுக்கு சாட்சியாய் அங்கே இருப்பார் உங்களோடு வருவார்.
கிறிஸ்துவினுடையவர்கள்:
உபத்திரவமும் பாடுகளும் இல்லாமல் இருப்பது கிறித்துவினுடையவர்களின் வாழ்க்கை இல்லை, என்ன உபத்திரவம் வந்தாலும் இதை ஜெயித்து இதன் மத்தியில் ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சியாய் நிற்பதே கிறிஸ்துவினுடையவர்கள்.
2. புடமிடப்படுகிற வெள்ளி:
வெள்ளியினின்று களிம்பை நீக்கும்படி செல்லும் வாசல் பள்ளத்தாக்கின் வாசல் அதாவது உருவாக்குகிற வாசல்.
வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். நீதிமொழிகள் 25:4
-------
இந்த வாசல் எல்லா சபைகளிலும் இருக்க வேண்டும்.
கர்த்தர் சொன்னவசனம் நிறைவேறுமளவும் யோசேப்பை அவருடைய வசனம் புடமிட்டது. அவன் கடந்து சென்ற சோதனையில் அவனோடு கர்த்தருடைய கரத்தை தவிர வேறொன்றும் இருக்கவில்லை.
சபையிலே ஜனங்களை உற்சாகப்படுத்தும்படியான வார்த்தைகளைவிட அவர்களை புடமிடுகிற கர்த்தருடைய வசனம் இருக்க வேண்டும்.
பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை இருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4:12
இந்த வசனமே வெள்ளியினின்று களிம்பை நீக்குவது போல உன்னிடத்தில் இருக்கிற வேண்டாதவைகளை நீக்கி சுத்திகரிக்கும்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமானவருக்கு ஸ்தோத்திரம்.
25.01.2023
5. குப்பைமேட்டு வாசல்/ பரிசுத்தத்தின் வாசல்
குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டான்.
நெகேமியா 3:14
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
குப்பைமேட்டு வாசல் என்பது பரிசுத்தத்தின் வாசல், நினைவுகூறுதலின் வாசல், சுவிசேஷத்தின் வாசல், ஆறுதலின் வாசல்.
1. நகரத்தின் தீழ்பானவைகளை இந்த வாசல் வழியாய் வெளியே கொண்டு போவார்கள்.
2. பாவ நிவாரண பலியை இங்கே பலியிடுவார்கள்.
காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய். இது பாவநிவாரணபலி.
யாத்திராகமம் 29:14
3. பலிபீடத்தில் சுட்டெரிக்கப்பட்ட பலிமிருகத்தின் சாம்பலை இங்கே கொட்டுவார்கள்.
தேற்றுதலின்,பரிசுத்தத்தின் வாசல்:
பள்ளத்தாக்கின் வாசல் என்கிற புடமிடப்படுகிற அனுபவத்தில் வந்தவர்கள், அவர்களுக்குள் இருக்கும் தீழ்பானவைகளை அகற்றி, பரிசுத்தவான்களாய் அடுத்த வாசலுக்கு போவதற்கு இந்த வாசல் உதவியாய் இருக்கும்.
பாடுகளின் வழியாய் வருகிறவர்கள் கிறிஸ்துக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருக்கும்படிகும், கிறிஸ்து பட்ட பாடுகளைவிட நம்முடைய பாடுகள் அதிகமானதல்ல என்று நம்மை தேற்றும்படிக்கும், அவரை போலவே நம்மை மாற்றும்படிக்கும் மறுபடியும் அவரை நம்முடைய வாழ்க்கையில் நினைவுகூற செய்வது இந்த குப்பைமேட்டு வாசல்.
நினைவுகூறுதலின் சுவிசேஷத்தின் வாசல்:
பாவ நிவாரண பலியாகிய கிறிஸ்து இயேசு, எருசலேமுக்கு புறம்பே இருக்கிற கபாலஸ்தலம் என்கிற கொல்கோதாவில் நம்முடைய தீழ்பான பாவங்களை சுமந்து தீர்த்தார்.
கிறிஸ்து ஆலயத்திற்குள் பலியாகாமல் ஆலயத்திற்கு புறம்பே பாவ நிவாரண பலியானார், இதின் அர்த்தம் புறம்பே இருக்கிறவர்களுக்கும் இரட்சிப்பு அருளப்பட்டது. ஆதலால் இது சுவிசேஷத்தின் வாசல்.
இனி கழிவுகள், சாம்பல், குப்பை என்பது உங்கள் ஞாபகத்தில் வந்தால், இப்படிபட்ட உங்கள் பாவங்களையும் அருவருப்புகளையும் பாவமே அறியாத ஆட்டுகுட்டியானவரே சுமந்து அருவருப்பாகி தீர்த்தார் என்பதற்கு அடையாளம் என்பதை நினைவுகூறுங்கள்.
சாம்பல் & குப்பை
மூலைக்கு தலைக்கல்:
நகரத்தின் குப்பைகளை மறுபடியும் நகரத்தின் வயல் விளைச்சலுக்கு உறமாய் மாற்றுகிற வாசல்.
நகரத்திற்கு புறம்பே தள்ளப்பட்ட கிறிஸ்து இயேசு மூலைக்கு தலைக்கல் ஆனார்.
தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டு ஒருவரும் கடந்து நடவாததுமாய் இருக்கிறவர்களை உருவாக்கி பயன்படுகிறவர்களாய் மாற்றுகிற வாசல்.
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கு தலைக்கல்லாயிற்று, இது கர்த்தராலே ஆயிற்று, இது மற்றவர்களுடைய கண்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது
உங்களை மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படத்தக்கதாய் தேவன் உங்களை உயர்த்துவார். ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கி இருங்கள்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார். பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள். அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமுவேல் 2:8
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
️உன் பலிகள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டது, நற்கந்தமாய் சுகந்த தூபமாய் அவருடைய சந்நிதியிலே வந்தெட்டினது, உன் வேண்டுதல்களையெல்லாம் அவர் நிறைவேற்றுவார். உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வார்.
உன் சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை கொடுத்து உன்னை அலங்கரிப்பார்.
முதற்பலனானவருக்கு ஸ்தோத்திரம்.
31.01.2023
குப்பைமேட்டு வாசல் என்பது வெளிப்பாடுகள் நிறைந்த வாசல். பள்ளத்தாக்கின் வாசலில் உருவாக்கப்பட்டது எப்படிப்பட்டது என்று இனங்கண்டுகொள்ளுகிற வாசல்.
குப்பையில் மக்கும் குப்பை எது? மக்காத குப்பை எது?என்பதை பிரித்து அதின் தன்மைக்கு ஏற்றபடி அதை வெளியேற்றுவார்கள்.
அதைபோல கர்த்தருடைய சமூகத்தில் கனமுள்ள பாத்திரம் எது? கனவீனமான பாத்திரம் எது? எந்த பாத்திரம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்காக நிற்கும் என்பதை வெளிப்படுத்தும் வாசல் இந்த குப்பைமேட்டு வாசல்.
எல்லா சபைகளிலும் இந்த வாசல் இருக்க வேண்டும்.
இதுவே விசுவாசிகளாய் உள்ளே வந்தவர்களை ஊழியக்காரர்களாய் வெளியே கொண்டு போகிற வாசல்.
எல்லா வாசல்களும் உள்ளே வருகிற வாசல், குப்பைமேட்டு வாசல் மட்டும் வெளியே போகிற வாசல். அதாவது உள்ளே வந்த விசுவாசிகள் ஊழியர்களாய் இயேசு என்கிற சுவிசேஷத்தை புறம்பே இருக்கிறவர்களுக்கு கொண்டு செல்லுகிற வாசல்.
சபையில் குறைந்தது 15 வருடத்திற்கு மேல் இருக்கிறவர்கள் ஊழியர்களாய் இருக்க வேண்டும், இதுவே சபையின் வளர்ச்சி.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. எபிரேயர் 5:4
ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் தெரிந்துகொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
09.02.2023
குப்பைமேட்டு வாசல் என்பது உருவாக்குகிற/உணர்வடைய செய்கிற வாசல்.
வழிமாறி போன யோனாவை திரும்ப தேவனுடைய சித்தத்தின் மையத்திற்கு கொண்டுவர மீனின் வயிற்றை தேவன் பயன்படுத்தினார்.
இதை போல வழிமாறி போனவர்களை உணர்வடைய செய்து, திரும்ப தேவனுடைய சித்தத்தின் மையத்திற்கு கொண்டுவர இந்த வாசலை தேவன் பயன்படுத்துகிறார்.
நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே தேவன் உன்னை மறுபடியும் அழைக்கிறார், திரும்பி வா.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகாதபடிக்கு கடாச்சிப்பவருக்கு ஸ்தோத்திரம்.
15.02.2023
6. ஊரணி வாசல்
̲ஊரணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
நெகேமியா 3:15
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
ஊரணி வாசல் என்பது ஊற்றுகண் இருக்கிற வாசல் அதிலிருந்து தண்ணீர் சுரைக்கும். ஜீவ தண்ணீரை தருகிறவர் இயேசு ஒருவரே.
நன்றாக பண்படுத்தப்பட்ட நிலத்திலிருந்து ஊற்று புறப்படும், இதைபோல் நன்றாக புடமிடபட்ட மனிதனுடைய இருதயத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.
மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்படி மட்டுமல்ல, இரட்சிப்பு தேவைப்படுகிற ஜனங்களை திருப்தி செய்கிற சுவிசேஷ ஜீவத்தண்ணீரை கொடுக்க புறப்பட்டு போ.
இது மௌனமாய் இருக்கும் காலம் இல்லை. தைரியமாய் பேசு, உன் வாயோடு இருந்து ஆவியானவர் பேசுவார்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இந்த இருள் சூழப்போகிற காலத்தில் சுடர்களாய் பிரகாசிக்கும்படி நம்மை தெரிந்து கொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
23.02.2023
ஊரணி வாசல் என்பது ஆவிக்குரிய ஆழங்களின் வாசல். ஆவிக்குரிய ஆழத்திற்குள் செல்லும்போது ஆசீர்வாதத்தின் ஊற்று திறக்கப்படும்.
தேவனின் அன்பிற்குள் களிக்கூறுவதே ஆவிக்குரிய ஆழம். அதின் ஆழ அகல நீள உயரம் அளவிடமுடியாதது.
உதாரணம்:
ஈசாக்கு கிணறு வெட்டினபோது பல தடைகள் வந்தது, அவனுடைய பலனை மற்றவர்கள் ஏமாற்றி வாங்கி கொண்டார்கள். ஆனாலும் அவன் விடாமுயற்சியோடு செயல்பட்டதால் அவனுக்கு ரெகொபோத் என்னும் ஆசீர்வாதம் கிடைத்தது.
ஆவிக்குரிய வாழ்க்கையில் எலியாவைப்போல் அடிக்கடி சோர்ந்துபோகாமல், ஈசாக்கை போல் விடாமுயற்சியோடு செயல்பட்டால் ஆசீர்வாதத்தின் கிணறு கிடைக்கும்.
உன் ஊற்றுகண் ஆசீர்வதிக்கப்படுவதாக, அவைகள் அந்நியரக்கும் உரியவைகளாய் இராமல் உனக்கே உரியவைகளாய் இருப்பதாக.
வேதத்தில் எலியா மற்றும் ஈசாக்கின் உதாரணம் சொல்லப்பட்டால் இது மற்றவர்களுக்கு சொல்லப்பட்டது என்று நினைக்காமல் இதை வாசிக்கிற உங்களுக்கு சொல்லப்பட்டது என்று இதன்படி நடந்து கொள்ளுங்கள்.
வேதத்தில் எலியா என்று சொன்னாலும் ஈசாக்கு என்று சொன்னாலும் அது நான்தான் என்கிற மனப்பான்மையை வளர்த்து கொள்ளுங்கள்.
இது யாரோ ஒருவருக்கு சொல்லப்பட்டது இல்லை, இதை வாசிக்கிற உனக்கு ஆவியானவரால் சொல்லப்பட்டது.
முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் (இது ஆவிக்குரிய ஆழம்) பின்பு இவைகளெல்லாம் உனக்கு கூட கொடுக்கப்படும் என்பது ஆசீர்வாதம்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இந்த இருள் சூழப்போகிற காலத்தில் சுடர்களாய் பிரகாசிக்கும்படி நம்மை தெரிந்து கொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
01.03.2023
ஊரணி வாசல் என்பது காத்திருந்து புதுபெலன் புதிய கிருபைகளை அடைகிற வாசல். ஊற்று என்பதே புதிய தண்ணீர், தூய்மையான தண்ணீர் என்று அர்த்தம்.
கழுகு காத்திருந்து தன்னுடைய பழைய சிறகுகளை உரித்து புதிய சிறகுகள் வளரும்படி கடுமையான நிலைக்குள் செல்லும். இதை போல கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து புதியதை பெற்று கொள்ளுங்கள்.
எல்லா சபைகளிலும் புதிய ஆவியானவருடைய கிருபை வெளிப்பட வேண்டும்.
வேதத்தில் அதிகாலையில் அவருடைய கிருபை புதியதாய் இருக்கிறது என்று வாசிக்கிறோம்.
சோம்பேறிகளுக்கு இந்த ஊற்று கிடைக்காது, வாஞ்சித்து இதற்காக செயல்படுகிறவர்களுக்கே இந்த ஊற்று கிடைக்கும்.
பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின. எழுப்புதலை வாஞ்சிக்கிற கர்த்தருடைய ஜனமே!! உங்களை புதிய அனுபவத்திற்குள் நடத்த ஆவியானவர் ஆயத்தம், உன் பழைய மனிதனை கலைந்து போட நீ ஆயத்தமா?
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இந்த இருள் சூழப்போகிற காலத்தில் சுடர்களாய் பிரகாசிக்கும்படி நம்மை தெரிந்து கொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
08.03.2023
ஊற்று தண்ணீர் மற்ற இடங்களுக்கு பாய வேண்டும், அப்பொழுதுதான் உபயோகமாயிருக்கும். அது குட்டையாக ஒரே இடத்தில் இருந்தால் அதினால் என்ன பயன்?
இதைபோல தேவன் உங்களுக்குள் அபிஷேகம் என்கிற ஊற்றை வைத்திருந்தால் அதை சுயநலமற்றதாய் உபயோகப்படுத்துங்கள்.
சபைகளில் சுயநலமற்ற சேவை இருக்க வேண்டும் .
கர்த்தருரைய சேவைக்காக அர்ப்பணித்த நீ அதை அலட்சியம் பண்ணுகிறதென்ன?
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இந்த இருள் சூழப்போகிற காலத்தில் சுடர்களாய் பிரகாசிக்கும்படி நம்மை தெரிந்து கொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
17.03.2023
தேவன் தமது திருப்பணிக்கு அழைத்தவர்களை பார்த்தால் அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.
பேதுருவை சந்தித்த போது அவன் மீன் வலைகளை அலசிக்கொண்டிருந்தான்.
மோசேயை சந்தித்த போது, தாவீதை சந்தித்த போது இவர்கள் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்கள்.
தேவன் மூடர்களை தெரிந்து கொள்வாரே தவிர ஒருபோதும் சோம்பேறிகளை தெரிந்துக்கொள்ளமாட்டார்.
ஊரணி வாசல் என்பது வேலையை தொடர்ந்து செய்து ஜெயம் எடுக்கிற வாசல்.
சோம்பேறி குளிருகிறது என்று காரணம் சொல்லி உழமாட்டான் அறுப்பிலே பிச்சை கேட்டாலும் இப்படிப்பட்டவனுக்கு ஒன்றுங்கிடைக்காது.
சிலர் தங்களுடைய சொந்த வேலைகளை சுறுசுறுப்பாய் செய்து ஆசீர்வாதத்தையே பேசுவார்கள், தங்களையே மேன்மைப்படுத்தி கொள்வார்கள்.
கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.
ஆவியானவர் சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இந்த இருள் சூழப்போகிற காலத்தில் சுடர்களாய் பிரகாசிக்கும்படி நம்மை தெரிந்து கொண்டவருக்கு ஸ்தோத்திரம்.
24.03.2023
̲7. தண்ணீர் வாசல்
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
நெகேமியா 3:26
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
தண்ணீர் வாசல் என்பது கர்த்தருடைய வார்த்தையை குறிக்கும்.
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
எபேசியர் 5:26
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
சங்கீதம் 119:9
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
29.03.2023
தண்ணீர் வாசல் என்பது கர்த்தருடைய வார்த்தையை குறிக்கும்.
கர்த்தருடைய வார்த்தை என்பது ஆவிக்குரிய பட்டயம்.
பிசாசை சங்கரிக்க, சத்தியமில்லாத கள்ளர்களின் வஞ்சகத்தை மேற்கொள்ள இந்த பட்டயம் உபயோகப்படும்.
எல்லா சபைகளிலும் வார்த்தையின் நிறைவு இருக்க வேண்டும்.
சபையில் இந்த பட்டயத்தோடு நிற்கிற போர்வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
04.04.2023
தண்ணீர் வாசல் என்பது கர்த்தருடைய வார்த்தையை குறிக்கும்.
கர்த்தருடைய வார்த்தை என்பது ஆவிக்குரிய மன்னா.
நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்பட இந்த மன்னா அவசியம்.
வார்த்தையாகிய இயேசுவே ஜீவ அப்பம்.
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வதுபோல நீயும் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சரீர மனிதன் உயிர் வாழ எப்படி உணவு அவசியமோ!! இதைபோல ஆவிக்குரிய ஆத்துமா உயிர் வாழ கர்த்தருடைய வார்த்தையாகிய மன்னா அவசியம்.
வார்த்தையாகிய இயேசு உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உலக பிரகாரமான ஆசீர்வாதத்தினாலும் ஆவிக்குரிய உன்னதங்களின் ஆசீர்வாதத்தினாலும் நிரப்படுவீர்கள்.
13.04.2023
வார்த்தையாகிய இயேசு பாதாளத்தின் மரணத்தின் திறவுகோள்களை உடையவர்.
இந்த தண்ணீர் வாசல் நம் ஜீவனுக்கு உத்தரவாதம் தருகிற வாசல். ஜீவனின் அதிபதியானவர் இயேசு.
பரிசுத்தவான்களின் மரணம் பிசாசினுடைய கரத்தில் இல்லை, இது வெற்றிசிறந்த இயேசு கிறிஸ்துவினுடைய கரத்தில் இருக்கிறது.
நித்திய ஜீவனை வாக்குப்பண்ணினவர் இவரே.
இந்த வாசலின் திறவுகோள் மனிதர்களிடத்தில் இல்லை, இது தேவனுடைய கரத்தில் இருக்கிறது.
21.04.2023
தண்ணீர் வாசல் தேவனின் வார்த்தையை குறிப்பிடுகிறது.
வார்த்தையாகிய இயேசுவை தள்ளிவிடாமல் நிராகரிக்காமல் இருங்கள்.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல் தேவனுடைய வார்த்தையை தள்ளினான், தேவன் அவனை ராஜாவாய் இராதபடிக்கு தள்ளினார்.
இன்றும் அநேக சபைகளில் இயேசு வாசற்படியில் நின்று கதவை தட்டிக்கொண்டு இருக்கிறார், ஏனென்றால் வார்த்தையாகிய இயேசு என்கிற சத்தியம் நிராகரிக்கப்படுகிறது.
தேவன் ஒழுங்கும் கிரமுமாய் செயல்படுபவர், வலுக்கட்டாயமாய் எவரையும் வற்புருத்தி உள்ளே வருகிறவர் இல்லை.
இயேசு:உன் நிர்வாணம் எனக்கு முன்பாக காணப்படாதபடிக்கு உன் அரையை சத்தியம் என்னும் கட்சையினால் கட்டு.
29.04.2023
தண்ணீர் வாசல் தேவனின் வார்த்தையை குறிப்பிடுகிறது.
வார்த்தையாகிய இயேசு
வார்த்தையாகிய இயேசுவின் புதிய உடன்படிக்கையின் ஐக்கியம்.
வெளிப்படுத்தின விசேஷம் 4:3ல் சிங்காசனத்தை சுற்றிலும் வானவில் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் தேவன் அதை தமக்கு முன் வைத்திருக்கிறார்? நோவாவின் நாட்களில் தேவன் ஜலப்பிரளயத்தினால் இனி உலகத்தை அழிப்பதில்லை என்று உடன்படிக்கை செய்து, அதற்கு அடையாளமாய் வானவில்லை வைத்தார்.
இந்த அடையாளம் நமக்கு முன்பாக வானத்தில் தோன்றுகிறது. இதே வானவில் தேவனுடைய சிங்காசனத்தை சுற்றிலும், அவருக்கு நினைப்பூட்டும்படி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
பூலோகத்திலே தேவன் செய்கிற உடன்படிக்கை, பரலோகத்திலும் சாட்சியாக இருக்கும்.
உதாரணம்:
அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள், தாங்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு டைரியில் எழுதி வைப்பார்கள், இதை போலவே பரலோகத்திலும் இருக்கிறது.
️இது ஏதோ ஒரு இடத்தில் இல்லாமல், தேவன் உட்காரும் சிங்காசனத்தை சுற்றிலும் இருக்கிறது.
முக்கியமானவர்களை குறித்து இப்படி எழுதி வைப்பார்கள்! இதைபோல தேவனுக்கு மனிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாய் இருந்தால் சிங்காசனத்தை சுற்றிலும் வானவில் வைத்திருப்பார்!!
கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான புதிய உடன்படிக்கை நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
நாம் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது இயேசுவின் நாமத்தில் ஜெபிப்போம்.
நம்மீது இருக்கிற இயேசுவின் இரத்தத்தை பார்த்து, பிதா நாம் வேண்டிக்கொண்டதை நமக்கு அருள் செய்வார்.
தேவனோடு இருக்கிற ஐக்கியம் நமக்கு அருளப்பட்டு பிதாவினிடத்தில் நேரடியாக ஜெபிக்கும்படி திரைச்சீலை கிழிக்கப்பட்டது.
நாம் நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் இயேசுவின் இரத்தத்தின் உடன்படிக்கையின் மூலமாகவே பிதா நம்மை கேட்டருளுவார்.
நம்முடைய நீதி அவருக்கு முன்பாக அழுக்கான கந்தை. அனைத்தும் அவராலும் அவர்மூலமாயும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
இந்த வானவில் போல நமக்கும் தேவனுக்கும் இருக்கிற உடன்படிக்கையின் ஐக்கியம் நமக்கு முன்பாகவும் அவருடைய சிங்காசனத்திலும் இருக்கும்.
தேவன் நம்மை ஒருபோதும் மறக்கிறவர் இல்லை, அவருடைய உள்ளங்கைகளில் நம்மை வரைந்திருக்கிறார்.
பூலோகத்திலே பரிசுத்த ஆவியானவரால் எழுதப்படுகிற கர்த்தருடைய வார்த்தை, பரலோகத்திலே உங்களை நியாயந்தீர்க்கும்.
பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்பது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும், அதாவது நீ செய்கிறதை பரலோகம் அங்கீகரிக்கும்.
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் இதை மேற்கொள்வதில்லை.
12.05.2023
தண்ணீர் வாசல் தேவனின் வார்த்தையை குறிப்பிடுகிறது.
வார்த்தையாகிய இயேசு
கர்த்தருடைய வார்த்தை உருவாக்க கூடியது. அவர் அகிலத்தை தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்தார்.
இல்லாதவைகளை இருக்கிறவை போல அழைக்கிற தேவன் உன்னை தம்முடைய வார்த்தையினால் உருவாக்கி கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் மகிமையிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வார்.
எந்த மனுஷனையும் உலகத்திலே வந்து பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி இயேசு.
ஒன்றுமில்லாத உன்னை உருவாக்கி ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார். பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள். அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
1 சாமுவேல் 2:8
25.05.2023
தண்ணீர் வாசல் ஆவியானவரைக் குறிப்பிடுகிறது.
ஏசேக்கியல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் சொல்லப்பட்டபடி நீச்சல் ஆழம் கொண்டு செல்லுகிற ஆவியானவரின் கிரியை.
எல்லா சபைகளிலும் ஆவியானவரின் கிரியை காணப்பட வேண்டும்.
நீச்சல் ஆழம் என்றால் ஆவியானவரின் பிரசன்னத்தில் மூழ்கி இருப்பது என்று அர்த்தம்.
மாம்சத்தின் கிரியை வெளிப்படாதபடிக்கு ஆவியானவரின் கிரியைக்கு இடம் கொடுப்பதே தண்ணீர் வாசல்.
கனுக்கால் அளவு அல்ல, முழங்கால் அளவு அல்ல , இடுப்பு அளவு அல்ல , எங்களை நீச்சல் ஆழம் கொண்டு செல்லும் தேவா என்று ஆவியானவரின் கிரியைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
அவர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர்.
04.06.2023
தண்ணீர் வாசல் ஆவியானவரைக் குறிப்பிடுகிறது.
எசேக்கியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் சொல்லப்பட்டபடி நீச்சல் ஆழம் கொண்டு செல்லுகிற ஆவியானவரின் கிரியை. எல்லா சபைகளிலும் ஆவியானவரின் கிரியை காணப்பட வேண்டும்.
1.ஆவி யின் அநுக்கிரகம்
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
1 கொரிந்தியர் 12:7
• ஆவியானவரால் நிரப்பப்படும் போது, நமக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் இருக்கும்படியான ஆவியின் வரங்கள் செயல்படும்.
• தேவையான இடத்தில் தேவைப்படுகிற வரத்தை செயல்படுத்துகிறவர் ஆவியானவர்.
• வியாதியஸ்தனிடத்தில் சுகமளிக்கிற வரம் செயல்படும், வழிமாறி போன ஜனங்களுக்கு மத்தியில் தீர்க்கதரிசன வரம் செயல்படும்.
• குழப்பமான சூழ்நிலைகளில் வருங்காலத்தை குறித்து அறிந்துக்கொள்ள வெளிப்பாட்டின் வரம் செயல்படுகிறது.
• இதுபோல தேவையான வரங்கள், நம்முடைய பெருமைக்கு அல்ல அவருடைய நாமம் மகிமைப்படும்படி, இலவசமாய் பெற்ற இரட்சிப்பை இலவசமாய் கொடுக்கும்படிக்கு செயல்படுகிறது.
• நாம் ஆவியானவரால் நிரப்பப்படும் போது மாம்சத்தின் கிரியை அழிந்து கிறிஸ்துவின் வருகையில் எடுத்தக்கொள்ளப்படும்படியான ஆவியானவரின் நடத்துதல் காணப்படும். இதுவே எல்லாருடைய பிரயோஜனத்திற்கென்று அருளப்பட்ட ஆவியானவரின் அநுக்கிரகம்.
• எல்லா சபைகளும் ஆவியானவரின் அநுக்கிரகம் பெற்றிருக்க வேண்டும்
• மீட்பு நாளுக்கென்று முத்திரையாய் பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்.
• பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் பேசப்படுகிற எந்த தூஷனமும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது.
18.06.2023
2. தகப்பனின் பரிசு
• தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசாயா 44:3
• ஆவியானவர் தலைமுறையின் ஆசீர்வாதங்களை கொடுக்கிறவர்.
• இயேசு கிறிஸ்து வானத்திற்கு ஏறினபோது தேற்றரவாளன் வருவார் அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்று சொன்னார்.
• அடுத்து வரப்போகிற சந்ததிக்கு நீதி நியாயங்களை அறிவித்து அவர்களை நடத்துகிறவர் ஆவியானவர்.
• ஆவியானவரால் நடத்தப்பட்ட சாமுவேல், இயேசு என்பவர்கள் சமுதாயத்திற்கு நல்ல முன்மாதிரியை வைத்து போனார்கள்.
• இதைப்போல அடுத்து வரப்போகிற *சந்ததி உலகத்தை கலக்குகிறவர்களாய் இருக்க வேண்டும்* என்றால் ஆவியானவர் வேண்டும்.
• பிதா கொடுத்த உன்னதமான பரிசு இயேசு கிறிஸ்துவும் அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியாகிய ஆவியானவருமே.
• நம் பிறந்த நாளுக்கும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் நமக்கு முக்கியமானவர்கள் கொடுக்கிற பரிசை எப்படி பாதுக்காப்பாக வைத்துக்கொள்வோமோ! அதுபோல ஆவியானவரை அடுத்த சந்ததிகளுக்கு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
இது பரம தகப்பனின் அன்பு பரிசு.
மீட்பு நாளுக்கென்று முத்திரையாய் பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்.
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் பேசப்படுகிற எந்த தூஷனமும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
தகப்பனின் அன்பை பெறாதவர்களுக்கு தகப்பனாய் இருந்து அரவணைக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
02.08.2023
3. நல்ல ஆவி️
• அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர். அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். நெகேமியா 9:20
• மற்றவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவருடைய நல்ல ஆவியால் கடவுள் நம்மை ஆசீர்வதித்தார்
• ஒவ்வொரு திருச்சபைக்கும் இந்த மாதிரியான எண்ணம் இருக்க வேண்டும். எனவே அவிசுவாசிகளின் வாழ்க்கை கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையின் மீது கட்டப்படும்.
• ஒவ்வொரு தேவாலயமும் இயேசுவின் பெயரில் இந்த வகையான தன்னலமற்ற எண்ணத்தைக் கொண்டிருக்கட்டும்.
• ஆண்டவர் கிறிஸ்து இயேசுவுக்கு இந்த நல்ல எண்ணம் இருந்தது, அதனால் அவர் தனது உயிரைக் கொடுத்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
• கடவுள் நல்லவர், அதனால் அவருடைய பிள்ளைகள் நல்ல நோக்கத்துடன் வாழ்கிறார்கள்
• நம்ம ஹீரோ அப்பா இயேசு நமக்கு இருக்கிறது போல குழந்தைகளின் முதல் ஹீரோ அவர்களின் அப்பாதான்.
• பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல அவருடைய ஆவியினாலேயே ஆகும்.
• அவர் தனது சுவாசத்தை நமக்குக் கொடுத்தார், அதாவது அவர் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை.
09.08.2023
4. ஞான எழுப்புதல்
எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள். யாத்திராகமம் 35:26
• தேவன் மோசேக்கு கற்பித்தபடி கர்த்தருக்கு கூடாரம் அமைக்க, உடன்படிக்கை பெட்டி செய்ய, இன்னும் பல காரியங்களை செய்ய பெசலேயேல், ஸ்திரிகள் மற்றும் பலரை தேவ ஆவியினால் நிரப்பி ஞான எழுப்புதலை அவர்கள் இருதயத்தில் தந்தார்.
• தேவனுடைய வேலையை செய்ய வேண்டும் என்றால், தேவ ஆவியினால் நிரப்பட்டு, இருதயம் ஞான எழுப்புதல் அடைய வேண்டும்.
• இந்த ஞானம் எருசலேம் ஜனங்களிடத்தில் இல்லாததால் இயேசு அவர்களை சந்திக்கும் காலத்தை அறியாமல் தவறவிட்டார்கள். தேவன் நம் மத்தியில் இருக்கிறார்.
• அவரை அறிந்துக்கொள்ளவும் அவருடைய வேலையை செய்யவும் நம்முடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைய வேண்டும்.
• இந்த எழுப்புதல் வந்தால் எழுப்புதலடைந்தவர்கள் பொறாமையும் வாக்குவாதமும் இல்லாமல் தேவனுக்கும் அவரால் அழைக்கப்பட்ட ஊழியர்களுக்கும் கீழ்ப்படிவார்கள்.
• பெந்தெகோஸ்தே நாளில் ஒரு மனமாய் எழும்பினவர்களை போலவும் பேதுரு கூட உடன்ஊழியர்களாய் நின்ற சீஷர்களை போலவும் கர்த்தருடைய ஆவியால் ஒரே சிந்தையோடு தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டும்படி ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
• உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாவீர்கள.
• சபைகளுக்குள் இருக்கிற பிரிவினைகள் நீங்க வேண்டும் என்றால், எல்லாருடைய இருதயமும் ஞான எழுப்புதல் அடைய வேண்டும்.
• இயேசு:உன் இருதயத்தை எனக்கு தா!! நான் அதில் வாசம் பண்ணுவேன். ஜீவ ஊற்று உண்டாகும்படி அதை பண்படுத்துவேன்.
ஞான எழுப்புதல்
பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான். யாத்திராகமம் 36:2
• தேவன் மோசேக்கு கற்பித்தபடி கர்த்தருக்கு கூடாரம் அமைக்க, உடன்படிக்கை பெட்டி செய்ய, இன்னும் பல காரியங்களை செய்ய பெசலேயேல், ஸ்திரிகள் மற்றும் பலரை தேவ ஆவியினால் நிரப்பி ஞான எழுப்புதலை அவர்கள் இருதயத்தில் தந்தார்.
• தேவனுடைய வேலையை செய்ய வேண்டும் என்றால், தேவ ஆவியினால் நிரப்பட்டு, இருதயம் ஞான எழுப்புதல் அடைய வேண்டும்.
• இந்த ஞானம் எருசலேம் ஜனங்களிடத்தில் இல்லாததால் இயேசு அவர்களை சந்திக்கும் காலத்தை அறியாமல் தவறவிட்டார்கள். தேவன் நம் மத்தியில் இருக்கிறார்.
• இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டனர் ஆனாலும் அவர்களுடைய சிந்தை எகிப்தின் அடிமைதனத்திற்குள் இருந்தது.
• தேவன் வனாந்தத்தில் அவரை ஆராதிக்கும்படி விடுதலையாக்கினார்.
• ஜனங்களோ ஜீவனுள்ள தேவனோடு வனாந்திரத்தில் இருப்பதைவிட எகிப்தின் சுகபோகத்தை நாடினார்கள்.
• களப்பையில் கை வைத்துவிட்டு பின்னிட்டு பார்க்கிறது ஆபத்தாய் முடியும்.
• இந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இப்படிதான் நடந்தது
• அதனால் சிந்தையில் விடுதலை வேண்டும் சபைகள் ஞான எழுப்புதல் அடைய வேண்டும்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
01.05.2024
7
8. குதிரை வாசல்
Sub series 1:
குதிரை வாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
நெகேமியா 3:28
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
குதிரை வாசல் ஆவிக்குரிய யுத்தத்தை குறிப்பிடுகிறது.
முன்னோர்களின் நாட்களில் யுத்தத்திற்கு செல்லும் குதிரைகளும், தளபதிகளும், போர்சேவகர்களும், மற்ற யுத்த ஆயுதங்களும், உபகரணங்களும், யுத்தத்திற்கு தேவையான அனைத்தும் இந்த குதிரை வாசல் வழியாய் கொண்டு செல்லப்படும்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் குதிரை யுத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.
ஆளுகை செய்பவன்
1. ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்: சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
நீதிமொழிகள் 12:24
2. சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்: சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீதிமொழிகள் 10:4
யுத்த குதிரை சுறுசுறுப்பிற்கு அடையாளம். சோம்பேறியின் ஆத்துமா விரும்பினாலும் ஒன்றும் பெறாது. அவன் ஆசை அவனை கொல்லும் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவன் வேலை செய்கிறவர்களை, சுறுசுறுப்புள்ளவர்களை, உண்மையுள்ளவர்களை ஆசீர்வதிப்பாரே அன்றி சோம்பேறியை ஒருபோதும் ஆசீர்வதித்ததாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துவை அறிந்தவர்கள் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரங்களை, தாலந்துகளை எஜமானுக்காக உபயோகப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.
உவமை:
மத்தேயு 25ஆம் அத்தியாயம்.
1. தாலந்துகள்
5 தாலந்தை வாங்கினவன் அதை வைத்து வேறு 5 தாலந்துகளை சம்பாதித்தான்,
2 தாலந்தை வாங்கினவன் அதை வைத்து வேறு 2 தாலந்துகளை சம்பாதித்தான்.
1 தாலந்தை வாங்கினவனோ அதை புதைத்து வைத்தான்.
இதில் 1 தாலந்தை வாங்கினவன் வேலை செய்யாமல் இருக்கிறதற்கு சிறந்த காரணங்ளை சொன்னான், ஆனாலும் எஜமான் அவனை அங்கீகரிக்காமல் புறம்பான இருளிலே தள்ளினார்.*
2. 10 கன்னிகைகள்:
10 கன்னிகைகளில் தங்களிடத்தில் உள்ள எண்ணெயை குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருந்து எஜமானுடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் 5 கன்னிகைகள் மட்டுமே.
எனவே எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
3. கனிகள்
தேவன் கனிகளின் கணக்கையும் கேட்பார். எப்படியெனில் ஏற்ற காலத்தில் அத்தி மரம் அதின் கனியை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.
பிரியமானவர்களே இதைபோல தேவனும் நம்மிடத்தில் கொடுக்கப்பட்ட தாலந்துகளின் வரங்களின் கணக்கை கேட்பார்.
எல்லா சபைகளும் சுறுசுறுப்புள்ளவர்களாய் ஜாக்கிரதையுள்ளவர்களாய் எஜமானுடைய வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்களே தேவனோடு ஆயிரம் கால அரசாட்சியில் ஆளுகை செய்கிறவர்களாய் இருப்பார்கள்.
மாரநாதா!!
21.04.2024
Sub series 2: ஜெயம் கொடுக்கும் தேவன்
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31
• குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக வேண்டும் ஆனாலும் ஜெயத்திற்கு கர்த்தரையே சார்ந்திருக்க வேண்டும்.
• நாம் எப்படி ஆயத்தப்பட்டாலும் என்னென்ன பிரயாசம் மேற்கொண்டாலும் கர்த்தருடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஒப்புக்கொடுத்து, கர்த்தரையே சார்த்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
• இதற்கு முன்மாதிரி நம் இயேசு அப்பாவின் ஜெபம். "ஆகிலும் என்னுடைய சித்தத்தின்படி இல்லை, பிதாவின் சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஒப்புக்கொடுத்தார்.
• அவர் பிள்ளைகளாகிய நாமும் அவரை போலவே ஜெபிக்க வேண்டும்.
• எதுவுமே நம்முடைய பெலத்தினாலும் சாமர்த்தியத்தினாலும் உண்டாகாது. ஜெயம் கொடுக்கிற தேவனுடைய கிருபை நம்மை தாங்குகிறது என்கிற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.
• இதன்மூலம் நாம் தேவனுடைய நாமத்தை உயர்த்தி தேவனுக்கு மகிமை செலுத்துவோம். அவர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர்.
• கிறிஸ்துவை அறிகிற அறிவே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தும்.
• உயர்வானாலும் தாழ்வானாலும் வேறு எந்ந சூழ்நிலையானாலும் கர்த்தர் அனுமதிக்காமல் எதுவுமே நடக்காது, எனவே கர்த்தரையே சார்ந்திருக்க பழக வேண்டும்.
• ஆவியிலே யுத்தம் ஆரம்பித்தவர்கள் ஆவியிலே அதை முடிக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவின் பிரமாணம்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
நமக்கு ஜெயம் கொடுத்த கிறிஸ்து இயேசுக்கு சகலவிதமான துதியும் கனமும் மகிமையும் பெருமைகளும் உண்டாவதாக!!
கர்த்தரையே தெய்வமாக கொண்ட நாம் பாக்கியமுள்ள ஜனங்களாய் இருக்கிறபடியினாலே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
ஆமென்.
1. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
சங்கீதம் 20:7
இதை வாசிக்கிறவன் ஆவியானவர் சொல்வதை சிந்திக்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
07.04.2024
Sub series 3
குதிரை வாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
நெகேமியா 3:28
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
குதிரை வாசல் ஆவிக்குரிய யுத்தத்தை குறிப்பிடுகிறது.
• முன்னோர்களின் நாட்களில் யுத்தத்திற்கு செல்லும் குதிரைகளும், தளபதிகளும், போர்சேவகர்களும், மற்ற யுத்த ஆயுதங்களும், உபகரணங்களும், யுத்தத்திற்கு தேவையான அனைத்தும் இந்த குதிரை வாசல் வழியாய் கொண்டு செல்லப்படும்.
• வெளிப்படுத்தின விசேஷத்தில் குதிரை யுத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.
• கிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆவிக்குரிய யுத்தம் செய்ய பழக வேண்டும். ஏனென்றால் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்த இல்லை துறைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் நமக்கு யுத்தமுண்டு என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
• கிறிஸ்துவின் போர்சேவகனாக நிற்க உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஆவிக்குரிய சர்வாயுதங்களை தரித்துக்கொள்ளுங்கள்.
• இது யுத்தத்தின் வாசல் என்பதால் தேவன் முன்பதாகவே தண்ணீர் வாசலாகிய தேவனுடைய வார்த்தையாகிய பட்டயத்தைக் கொடுத்து ஆவியானவரின் அநுக்கிரகத்தின் அனுபவத்திற்குள்ளும் உங்களை நடத்தினார்.
• நீ மாம்சத்தில் சும்மாயிருந்து ஆவியிலே யுத்தம் பண்ணு ஏனென்றால் யுத்தம் கர்த்தருடையது. இன்று நீ மவுனமாயிருந்தால் இரட்சிப்பு வேறு இடத்திலிருந்து வரும். இந்த விசேஷங்களெல்லாம் உனக்கு முன்னறிவிக்கப்பட்டதிற்கு காரணம் இந்த யுத்தத்தின் நாட்களில் நீ உபயோகமாய் இருக்கும்படிக்கே!!
• எல்லா சபைகளும் ஆவிக்குரிய யுத்தம் செய்ய பழக வேண்டும், ஏனென்றால் பலவானை முந்தி கட்டினால்தான் அவன் வீட்டின் உடைமைகளை(கட்டப்பட்ட ஆத்துமாக்களை) கொள்ளையிட முடியும்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
இயேசு: அனலாய் இரு (இயேசுவோடு நில்) அல்லது குளிராய் இரு (இயேசுவோடு யுத்தத்தில் நிற்காவிட்டால் பிசாசின் பட்சமாய் நிற்கிறாய் என்று அர்த்தம்) இவை இரண்டும் இல்லாமல் (இயேசுவோடு சில நாள் பிசாசோடு சில நாள்) வெதுவெதுப்பாய் இருந்தால் என் வாயினின்று வாந்திப்பண்ணி போடுவேன்.
தேவன் தம்முடைய மணவாட்டியாகிய சபைக்காய் வைராக்கியம் கொண்டு ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவராய் வீற்றிருக்கிறார்.
சபையில் தண்ணீர் வாசலின் நிறைவினால் உண்டாகும் கனி இல்லாவிட்டால் அநேக அடிகள் அடிக்கப்படும்படி உபாதிக்கிறவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுப்பார்.
காலத்தை அறிந்து தேவனுடைய இருதய துடிப்பை உணர்ந்து சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுவாயாக.
1. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14
2. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:12
இதை வாசிக்கிறவன் ஆவியானவர் சொல்வதை சிந்திக்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
05.05.2024
9. கிழக்கு வாசல்
அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
நெகேமியா 3:29
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்.
அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும் படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14:4
கிழக்கு வாசல் இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையை குறிப்பிடுகிறது.
ஆயிரம் கால அரசாட்சியின் மேன்மை.
நாம் எதற்காக கிறிஸ்துவை பின்பற்றுகிறோம்? இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனை அடையவும், ஆயிரம் வருட அரசாட்சியில் அவரோடு ஆளவும், அவருடைய ஜனங்களாய் இருக்கவும் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். இதற்காகவே தேவன் நம்மை பிரித்தெடுத்தார், அவருடைய அநாதி தீர்மானத்தின்படி நாம் அவரை பின்பற்றுகிறோம்.
இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல, இது தற்காலிக கூடாரம்.
நம்முடைய வீடு பரலோகத்திலிருக்கிறது, மறுமையின் ஆசீர்வாதத்திற்காக நாம் மட்டுமல்ல மாம்சமான யாவரும் எதோ ஒரு வகையில் பிரயாசப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.
இப்படிப்பட்ட அழியா மகிமையின் ஆசீர்வாதத்தை பெற எல்லா சபைகளும் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த வருகையை மாம்சமான யாவரும் காண்பார்கள், கிறிஸ்துவை அறிந்தவர்கள் அதில் பங்குள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுதல் நம்முடைய ஆத்துமாவுக்கு நலமாயிருக்கும்.
கிறிஸ்துவின் உடன் வேலையாட்களும், கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையும் கர்த்தருடைய வருகைக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிற நினைப்பூட்டுதலை தருகிறது இந்த கிழக்கு வாசல்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
19.05.2024
10. மிப்காத் வாசல் (பரிசோதனை வாசல்)
̲அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
நெகேமியா 3:31
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
கிரீடம்
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப்படுத்தின விசேஷம் 3:11
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24:13
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
• பரிசோதனை வாசலில் அவனவனுடைய கிரியைகளின் பலன் வெளியாகும்.
• முடிவு பரியந்தம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிலைத்திருந்து, கறைதிரையற்றவனாய் தன்னை காத்துக்கொள்பவனே இரட்சிக்கப்படுவான். அதாவது ஜீவகிரீடத்தை பெற்றுக்கொள்ளுவான்.
• அனுதினமும் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டும்.
• அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர். அவரையல்லாமல் இரட்சிப்பு இல்லை.
• இத்தனை வாசலின் அனுபவங்கள், ஆவிக்குரிய பெருமைகள் உங்களை பரலோகத்தில் சேர்க்காது, ஆதலால் மறுபடியும் ஆட்டு வாசலாகிய இரட்சிப்பின் அனுபவத்திற்குள் செல்ல வேண்டும்.
• நாம் நிற்பதும் நிற்மூலமாகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபையே!! அவரையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
• நாம் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்றுக்கொண்ட ஆவியானவரை துக்கப்படுத்தாமல், அவருடைய உதவியால் முடிவு பரியந்தம் நிலைத்திருந்து இரட்சிக்கப்பட தேவன் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்!!
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
————————————————-
15.01.2024
SERIES:16
மறுரூபம்:
அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்,; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு:
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.
1 இராஜாக்கள் 18:30,31,32,33
• நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள்.
• உங்களுக்குள் இருக்கிற அந்நிய தேவர்களின்பலிபீடத்தை தகர்த்து, உங்களுக்குள் ஆவியானவர் வாசம்பண்ணவும் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தவும் தேவனுக்கு உகந்த ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
• உங்கள் இருதயம் புதிதாகிறதினாலே மறுரூபமாவீர்கள்.
• உங்கள் தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் நினைத்து சோர்ந்துபோகாதிருங்கள்.
• உனக்குள் இருக்கிற பலிபீடத்தை செப்பனிடு! உன்மூலமாய் தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்படும்.
• நிச்சயமாகவே தேவன் உன்மூலமாய் மகமைப்படுவார், எந்த இடத்தில் தேவ நாமம் தூஷிக்கப்பட்டதோ அதே இடத்தில் தேவன் உன் மூலமாய் உயர்த்தப்படுவார்.
உதாரணம்:
• தகப்பனின் இருதயம், சாவுக்கேதுவான தன் ஒரே புத்திரனுக்காக பரிதப்பிக்கிறது போல தேவனுடைய இருதயம் உன்னுடைய மனந்திரும்புதலுக்காய் காத்திருக்கிறது.
• தைரியமாய் அவருடைய இரக்கத்தை நம்பி கிருபாசனத்தண்டை வா!
• தேவன் தம்மிடத்தில் வருகிற ஒருவரையும் புறம்பே தள்ளுகிறதில்லை. மண்பான்டமாகிய உனக்குள் கர்த்தருடைய மகிமை இருப்பதே அந்த இரகசியம்.
• நீ விசுவாசித்து குயவனுடைய கரத்தில் உடைக்கப்பட்டு உருவாக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தால் தேவனுடைய மகிமை வெளிப்படும்.*
• எல்லா சபைகளும் உயிர்மீட்சி அடைய வேண்டுமென்பதே தேவ சித்தம், உன் மூலமாய் தேசத்தில் எழுப்புதல் வர வேண்டும் என்பதே அநாதி தீர்மானம்.
இயேசு: இன்று உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் நாளைக்கு உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வேன்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்க கடவன்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
22.05.2024
SERIES:17
பிரியமானவர்கள்
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
2 கொரிந்தியர் 9:6
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
• நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்.
• எந்த அளவினால் அளந்தீர்களோ! அதே அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.
• உங்களுக்குள் வசனம், ஆவியின் நிறைவு விதைக்கப்பட்டால் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படியான ஆசீர்வாதத்தை அறுப்பீர்கள்.
• மற்றவர்களுக்குள் வசனத்தை, நற்கிரியை விதைத்தால் அதன் பலனை அறுப்பீர்கள். உங்கள் பொக்கிஷம் பரலோகத்தில் சேர்த்துவைக்கப்படும்.
• மாற்றம் உங்களில் இருந்து ஆரம்பிக்கட்டும். நம் மாம்சம் ஒடுக்கப்பட்டு ஆவியானவர் நமக்குள் ஆளுகை செய்து, ஆட்கொண்டு பெருகினால் மிகுந்த பலன் நமக்கும் தேவ ராஜ்ஜியத்திற்கும் மற்றவர்களுக்கும் உண்டாகும்.
• விசனமாயுமல்ல கட்டாயமாயுமல்ல மனப்பூர்வமாய் தங்களை ஆவியானவருக்கு அர்ப்பணிப்பவர்களே இந்த அத்தும அறுவடையின் நாட்களுக்கு தேவையானவர்கள்.
• உற்சாகமாய் தங்களை அர்ப்பணிப்பவர்கிடத்தில் தேவன் பிரியமாயிக்கிறார்.
ஜெபம்: தேவனே நான் சிறுகவும்! நீர் பெருகவும்!! தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும், ஆமென்.
26.05.2024
SERIES 18
கண்களின் முத்து
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
சங்கீதம் 126:5,6
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே. *கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.*
1 கொரிந்தியர் 4:15
அப்போஸ்தலர் பவுல் சொன்னது போல ஆத்துமாக்களை பெற்றெடுக்கிறவன் அவர்களுக்கு ஆவிக்குரிய தகப்பன்.
உவமை:
• தாய் ஒரு பிள்ளையை பெறும் போது பிரசவ வேதனையால் கண்ணீர் சிந்துவாள்.
• பிள்ளையை பெற்றெடுத்த பின்பு, அந்த குழந்தையின் முகம் பார்த்து, தான் பட்ட வேதனை கண்ணீரையெல்லாம் மறந்துவிடுவாள்.
• அதாவது புதிதான ஒரு சிசு இந்த உலகத்தில் தனக்கு உறவாய் வந்ததை நினைத்து மற்ற கவலைகளை ஒரு பொருட்டாக எண்ணாதிருப்பாள்.
• இதை போல கண்ணீரோடு தேவ சித்தத்தின்படி கர்த்தருடைய வசனத்தை விதைக்கிற நீங்கள் கெம்பீரத்தோடு அறுப்பீர்கள், ஒரு பாவி மனந்திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.
• உங்கள் கண்ணீர், நீங்கள் படுகிற உபத்திரவம், மிகுந்த பலனுக்கேதுவானது என்பதை நினைத்து, இக்காலத்து பாடுகள் இனி வரும் காலத்தில் நம்மில் வெளிப்பட போகும் மகிமைக்கு ஒப்பானதல்ல என்பதை மறவாமல், உபத்திரவத்திலும் களிக்கூறக்கடவோம்.
• நம்முடைய கண்ணீர் அவர் துருத்தியில் இருக்கிறது.
• நீதியுள்ள நியாயாதிபதி பதில் செய்யாமல் போவாரோ!?
• நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது.
• நம்மை அழைத்தவர் நம்பத்தக்கவர், உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம் நடத்துவார்.
• இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள் இனி நகைப்பீர்கள்.
• கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய கண்ணீர் முத்துகளைவிட விலை உயர்ந்தது.
• கிறிஸ்துவின் நீதியை முன்னிட்டு கண்ணீரோடு ஜெபித்து ஜெபம் பெறுவோம்.
• உங்கள் கண்ணீரை தேவையற்ற காரியங்களுக்காய் வீணாக்காதீர்கள்.
ஜெபம்: தகப்பனே கண்ணீரோடு ஜெபிக்கும்படி எங்கள் இருதயத்தை ஆத்தும பாரத்தினால் நிரப்பும்.
ஆமென்.
29.05.2024
SERIES 19
அழைத்தவரின் தன்மை
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
யாத்திராகமம் 3:14
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
1. உண்மையுள்ளவர்:
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
1 கொரிந்தியர் 1:9
• நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
• மோசேயை அழைத்த தேவன் அவனை முடிவு பரியந்தம் நடத்தினார். இவனை போல தீர்க்கதரிசி முன்பு இருந்தது இல்லை, இனி வரப்போவதும் இல்லை என்கிற அளவிற்கு அவனை பயன்படுத்தினார்.
• மோசேயைவிட பெரியவர் நம்மத்தியில் இருக்கிறார். நம்மை அழைத்தவர் நம்மை கொண்டு கிரகிக்க முடியாத பெரிய காரியங்களை செய்வார். இந்த அறுவடையில் நம்மை பயன்படுத்த அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.
• எவரையும் மேன்மைப்படுத்தவும் பெலப்படுத்தவும் அவர் கரத்தினால் ஆகும்.
கட்டளை:
👉🏻அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்துவார்.
நாம் தேவனோடு ஐக்கியமாய் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நாம் தேவனால் பயன்படுத்தப்பட முடியும். கிறிஸ்துவோடு இருக்கிறவன் பாவத்திற்கு அடிமைப்படான், பாவத்திற்கு அடிமைப்பட்டவனை தேவனால் பயன்படுத்த முடியாது.
2. உறுதிப்படுத்துகிறவர்:
நாம் விசுவாசத்தின் பிரமானத்தை சார்ந்தவர்கள், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன:
என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்:நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
மாற்கு 16:17,18
உவமை:
மோசே விசுவாசத்தினால் கோலை கீழே போட்டான் அது பாம்பாக மாறியது
இதை போல கர்த்தருடைய அழைப்பை பெற்றவர்கள், ஏற்ற காலத்தில் விசுவாசத்தோடு செயல்பட்டால் நம்மை கொண்டு அவருடைய சாட்சியின் வசனத்தை அற்புதங்களினாலும் அடையாளத்தினாலும் உறுதிபடுத்துவார்.
3. கிருபையளிப்பவர்:
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
ரோமர் 5:2
இதே விசுவாசம் நாமும் இரட்சிப்பை இழந்துபோகாதபடிக்கு அவரில் நிலைத்திருக்க கிருபையை பெற்று தருகிறது.
விசுவாசம் இல்லாமல் கர்த்தருக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்.
விசுவாசத்தினால் வராத அனைத்தும் பாவம் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரும் தங்களுடைய இரட்சிப்பை குறித்து பெருமைப்பாராட்டாதபடிக்கு நாம் கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம் இது நம்மால் உண்டானது அல்ல தேவனுடைய ஈவு.
4. பிரகாசிக்கப்பண்ணுபவர்:
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
சங்கீதம் 118:27
நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களைதான் நம்புவோம்.
இதைபோல முழு மனதோடு தங்களை அர்ப்பணித்தவர்கள் தேவனை நம்புவார்கள். இப்படிப்பட்டவர்களை தேவன் பிரகாசிப்பிக்கப்பண்ணுவார்.
ஆசீர்வாதம்:
• உங்களை தேவன் அதிகாரப்படுத்தி அனுப்புகிறார்.
• மனிதர்கள் ஏமாற்றலாம், கைவிடலாம், பகைக்கலாம், நம்மை மறந்து போகலாம், நன்றி இல்லாதவர்களாய் இருக்கலாம் . ஆனால் நம்மை அழைத்த தேவன் இருக்கிறவராக இருக்கிறார்.
• அதாவது நம்பத்தக்கவர், பட்சபாதமில்லாதவர், காலங்களையும் சமயங்களையும் உண்டாக்கினவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
• யெகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம், இரட்சிப்புகென்று பூமியில் அருளப்பட்ட நாமம் இயேசு கிறிஸ்து, இதை போல ஆயிரம் ஆயிரம் நாமங்களும் அதின் தன்மைகளையும் உடைய தேவன் இருக்கிறவராகவே இருக்கிறார்.
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
02.06.2024
SERIES 20
அநுக்கிரக காலம்
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
1. இயேசு கிறிஸ்து
கிருபைபினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்: கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 16:6
• உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்தார்.
• தம்மிடத்தில் வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாதவர்.
• பாவத்தை வெறுத்து பாவியை நேசிப்பவர்.
• ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் இலவசமாய் இரட்சிப்பவர்
2. பிதாவின் சித்தம்:
• கிறிஸ்துவினுடைய வருகை ஏன் தாமதிக்கிறது?
• எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு, தேவனை அறிகிற அறிவை அடயை வேண்டும்.
• ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துவினுடைய வருகை தாமதிக்கிறது.
3. வல்லமை:
• சவுலை பவுலாக மனமாற்றுகிறவருடைய வல்லமை செயல்படும்.
• கர்த்தருடைய பிரதியட்சமான தொடுதல் உண்டாகும்.
• கிறிஸ்துவின் வல்லமை இதுவரை நடந்திராத ஆவியானவருடைய கிரியைகளினால் பிதாவின் சித்தம் நிறைவேற்றப்படும்.
• இப்படிப்பட்ட அன்பான தகப்பனின் அநுக்கிரக காலத்தை குறித்து அறிவிக்கிற சுவிசேஷகனுடைய பாதங்கள் அழகானது.
• விதமான ஊழியத்தினாலும் தேவன் தம்முடைய மகிமையை விளங்க பண்ணுவார்.
4. அநுக்கிரக காலமும் தேவனுடைய பொறுமையும் நியாயத்தீர்ப்பும்
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன், தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
சங்கீதம் 69:13
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
லூக்கா 4:19
• சங்கீதங்களின் புத்தகத்திலும், லூக்காவிலும் எழுதப்பட்டபடி அநுக்கிரக காலம் என்பது ஆத்ம அறுவடையை குறிப்பிடுகிறது.
• இந்த காலத்தில் இரட்சிப்பு, ஆத்தும மீட்பு உண்டாகும். இதை துவங்கினவர் இயேசு கிறிஸ்து.
• இப்பொழுது பின்மாறியின் அபிஷேகத்தினால், வளர்ந்த பயிர்களின் அறுவடை நடந்து, கர்த்தருடைய களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்படும்.
• பதறையோ அவியாத அக்கினியிலே சுட்டெரிப்பார்.
• உனக்கு நியாயங்கிடைக்கவில்லையே என்று கலங்காதே! அறுப்பு காலம்வரை தேவன் பதறை பிடுங்கவிடமாட்டார்.
• ஏனென்றால் பதறை பிடுங்குவதால் பயிருக்கு சேதம் உண்டாகும்.
• அவர் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராய் இருந்து, சீக்கிரத்தில் நியாயம் செய்வார்.
• மனிதன் மறந்தாலும் தேவன் அதை தமது கணக்கில் வைத்திருக்கிறார்.
• உன் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு இடையூராய் இருந்த அமெலேக்கியருக்கு பதில் செய்ய மறக்கவில்லை.
• இரட்சகருடைய திருரத்ததால் மீட்கப்பட்ட ஜனமே நீ பாக்கியவதி, உனக்கு ஒப்பானவன் பூமியில் இல்லை.
• தேவன் நினைத்தபடியே நடக்கும் அவர் நிர்ணயித்த காரியம் நிறைவேறும் தேவன் செய்வதை தடுப்பவன் எவனும் இல்லை.
ஜெபம்:
பிதாவே உம்முடைய சித்தத்தின்படி என்னுடைய ஜனத்தையும் தேசத்தையும் இயேசுவின் நாமத்தினாலே இரட்சியும்.
ஆமென்!!
எல்லா சபைகளும் இயேசு கிறிஸ்துவுடனே இணைந்து நின்று, இந்த அநுக்கிரக காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்.
05.06.2024
SERIES 21
மனப்பூர்வமான பலி
̲நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து,
எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
கொலோசெயர் 3:23,24
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
• நாம் எதை செய்தாலும் தேவனுக்கென்று மனப்பூர்வமாய் செய்ய வேண்டும்.
• வேதபாரகர் பரிசேயர் சதுசேயர் போல பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் மனப்பூர்வமாய் கர்த்தருக்கென்று செய்ய கடவோம்.
• நாம் "அப்பா பிதாவே" என்று கூப்பிடபண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றபடியினாலே இதனை பயத்தோடே கடமையாய் செய்யாமல், நமக்காய் சிலுவையை சுமந்து இரத்தம் சிந்தின இயேசுவுக்கு அன்பினாலே செய்ய கடவோம்.
• தேவன் நம்மிடத்தில் நம்பி கொடுத்ததை, அவர் வருகைவரையிலும் உண்மையாய் காத்து கொள்ள வேண்டும்.
• வீண் புகழ்ச்சியை நாடாதே, கர்த்தரால் புகழப்படுபவனே உத்தமன்.
• யோபுவை போல கர்த்தர் எதை அனுமதித்தாலும் அதை மனப்பூர்வமாய் ஏற்று கொள்ள வேண்டும்.
நன்றி பலி:
இந்த அறுவடையின் வெளிப்பாட்டை கொடுத்து, நன்மையாதை துவங்கினவருக்கு மனப்பூர்வமான துதியும் கனமும் மகிமையும் புகழ்ச்சியும் சதாகாலமும் உண்டாவதாக
நன்மை செய்தவருக்கு நன்றி.
09.06.2024
SERIES 22
அளவில்லாத ஆவி
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
யோவான் 3:34
ஆவிக்குரிய கண்ணோட்டம்:
• தேவன் தமது ஆவியை அளவில்லாமல் அருளியிருக்கிறார்.
• கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட ஆவி அவர் மூலமாய் நமக்கும் அருளப்பட்டிருக்கிறது.
• ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.
• நீங்கள் ஆவியினால் நிரப்பப்படும் போது, உங்கள் மூலமாய் அநேகர் விடுதலையடைவார்கள்.
• ஜெபம் உங்கள் அன்றாட வாழ்வின் பழக்கமானால் அற்புதம் உங்கள் வாழ்க்கையாகும்.
• எழுப்புதலுக்கு தேவை ஆவியானவர், ஆவியானவர் செயல்படுவதற்கு தேவை நீ!
• இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும், ஆவியின் நிறைவினால் கர்த்தருடைய வார்த்தை பேசு அப்பொழுது உலர்ந்த எலும்புகள் உயிரடைந்து பெரிய சேனையாய் எழும்பும்.
• அறுவடை மிகுதி ஆட்கள் குறைவு, இன்றே அர்ப்பணித்து செயல்படுவாயா உன் தேவனுக்காய்?!
• இன்றே இரட்சணிய நாள். இரட்சிப்பு கர்த்தருடையது நீ சுவிசேஷத்தை அறிவி இரட்சிக்கிறதை தேவன் பார்த்துக்கொள்வார்.
இயேசு: நீ படபோகும் பாடுகளை குறித்து கொஞ்சமும் அயப்படாதே, நீ பேச வேண்டிய வார்த்தைகளை அருளி உன்னை தப்புவிக்கிறதர்க்கும் பெலப்படுத்துவதற்கும் நான் உன்னோடுகூட இருக்கிறேன்.
முடிவு பரியந்தம் உண்மையாயிரு அப்பொழுது ஜீவ கிரீடத்தை பெறுவாய்.
என் கிருபை உனக்கு போதும்.
கிறிஸ்துவுக்குள் சாவு எனக்கு ஆதாயம் என்கிற சவாலின் வைராக்கியமான சத்தம் தொனிக்கும்.
இப்படிப்பட்ட ஸ்தேவான்கள் மூலம் பவுல்களை எழுப்ப தேவன் தீர்மானித்தார்.
நீச்சல் ஆழம் கொண்டு செல்லுகிற ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.
12.06.2024
SERIES 23
நன்மைகளின் நாயகருக்கு நன்றி
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
யாக்கோபு 1:17
வேற்றுமையும் மாறுதலும் இல்லாத தேவன் அறுவடை என்கிற நன்மையை தந்து ஆசீர்வதித்தபடியினால் நன்றி.
சகலவிதமான துதியும் கனமும் மகிமையும் நன்மையான ஈவை தந்து ஆசீர்வதித்த தேவாதி தேவனுக்கு உண்டாவதாக .
ஜெபம்: தேவனே உம்முடைய வார்த்தையை தீவிரமாய் நிறைவேற்றும், பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய் போகாதபடிக்கு உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய கிருபை தாரும், இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
_____The End ______
Every new beginning comes from some other beginning's end....
God bless you
Written by Sharon Sandhiya